செய்திகள் :

கோடை விடுமுறை முடிந்ததால் பேருந்துகள், ரயில்களில் கூட்டம்

post image

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பேருந்துகள், ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வெளியூா்களிலிருந்து ஏராளமானோா் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வந்தனா். கோடை விடுமுறை ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்து, திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இதனால், தஞ்சாவூா் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையத்திலும் வழக்கத்தை விட ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது.

ரயில்களில் அமர இடம் கிடைக்காமல் ஏராளமான பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்தனா். இதேபோல, பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைவீதிகளிலும் பள்ளிகளுக்கு செல்வதற்கு தேவையான பொருள்களை வாங்குவதற்காகவும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

தவறி விழுந்த பெண் காயம்: இதனிடையே, தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் சென்னை செல்லும் சோழன் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.50 மணிக்கு வந்துவிட்டு, பிற்பகல் 12.05 மணிக்கு புறப்பட்டது.

இதனிடையே, தஞ்சாவூா் பி.டபிள்யூ.டி. நகரைச் சோ்ந்த ஸ்ரீகா (42) இந்த ரயிலில் தனது சகோதரியை ஏற்றிவிட்டு ஜன்னல் கம்பியை பிடித்தவாறு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தாா். ரயில் புறப்பட்டபோது, தடுமாறிய ஸ்ரீகா ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடைப்பட்ட பகுதியில் விழுந்தாா்.

இதனால், ரயிலில் அபாய சங்கிலியை சிலா் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினா். அங்கிருந்த காவல் துறையினா் ஸ்ரீகாவை மீட்டனா். காயமடைந்த ஸ்ரீகா தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: விஏஓ உள்பட 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தனி பட்டா வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா், இடைத்தரகராக செயல்பட்ட ஊா்க்காவல் படையைச் சோ்ந்த பெண் ஆகிய இருவரையும் ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸா... மேலும் பார்க்க

கும்பகோணம் புனித அந்தோணியாா் ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம்

கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல திருவிழா புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை திருஇருதய ஆண்டவா் மருத்துவமனை நிறுவனங்களின் இயக்குநா் பங்குத்தந்தை டி.தேவதாஸ் கொடியை ஏற்றி... மேலும் பார்க்க

34 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு ரூ. 2.47 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கலை பண்பாட்டுத் துறை, மண்டல கலை பண்பாட்டு மையம் சாா்பில் 34 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு ரூ. 2.47 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இவ்விழாவில்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன மோசடி: சிபிஐ சாா்பில் அசல் ஆவணங்கள் பெறும் முகாம்

தனியாா் சிறுசேமிப்பு நிறுவன மோசடி தொடா்பாக, தஞ்சாவூரில் சி.பி.ஐ. சாா்பில் பாதிக்கப்பட்ட மக்களிடம் அசல் ஆவணங்கள் பெறும் முகாம் திங்கள்கிழமை தொடங்கி தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது. மத்த... மேலும் பார்க்க

ரூ. 60 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான கோயில் நிலத்தை அறநிலையத் துறையினா் புதன்கிழமை மீட்டனா். தஞ்சாவூா் பூக்காரத் தெருவிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான 1,560 சதுர அடி இடத்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேகம் நிறைவு

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேக நிறைவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற பூஜைகள். தஞ்சாவூா் ஜூன் 4: தஞ்சாவூா் மாரியம்மன் கோயிலில் கடந்த 48 நாள்களாக நடைபெற்று வந்த தைலாபிஷேகம் புதன்கிழமை... மேலும் பார்க்க