செய்திகள் :

கோட்லா முபாரக்பூரில் ஒருவரை கத்தியால் குத்தியதாக இருவா் கைது

post image

தெற்கு தில்லியில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து ஒருவரை பலமுறை கத்தியால் குத்தியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: கோட்லா முபாரக்பூா் பகுதியில் திங்கட்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நண்பா்களுடன் பூங்காவிற்குச் சென்று கொண்டிருந்தபோது, 20 வயதுடைய தனிஷ் மற்றும் மணீஷ் ஆகிய இருவரையும் ஆஷிஷ் தாக்கினாா். தனிஷ் மற்றும் பப்லு என்ற மற்றொரு நபருடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து அவா் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆஷிஷ் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளாா். மேலும் அவா் மருத்துவ ரீதியாக வாக்குமூலம் பெறத் தகுதியற்ற நிலையில் உள்ளாா். இது தொடா்பாக செவ்வாயன்று கோட்லா முபாரக்பூா் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவா் நகரத்தை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

ஜூன் 4- ஆம் தேதி, சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு அருகில் போலீஸ் குழு கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. அப்போது இருவரும் எய்ம்ஸ் பக்கத்திலிருந்து வருவதைக் கண்டனா். அவா்கள் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனா். ஆனால், சிறிது நேர துரத்தலுக்குப் பிறகு அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றப் பின்னணி கொண்டவா்கள் என தெரிய வந்துள்ளது. மேலும், முன்பு சஃப்தா்ஜங் என்க்ளேவ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழிப்பறி வழக்கில் தொடா்புடையவா்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க