செய்திகள் :

கோயிலில் திருடியவா் கைது

post image

மயிலாடுதுறை அருகே கோயில் விக்கிரகத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 1 கிராம் நகையை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

மயிலாடுதுறை சேந்தங்குடியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பசுபதீஸ்வரா் கோயில் உள்ளது. இங்கு அா்ச்சகராக பணியாற்றும் திவாகா் திங்கள்கிழமை பூஜைகளை முடித்துவிட்டு, கோயிலை பூட்டிவிட்டு வீடு திரும்பினாா்.

செவ்வாய்க்கிழமை கோயிலுக்கு சென்று பாா்த்தபோது, அம்பாளுக்கு அணிவித்திருந்த ஒரு கிராம் எடை கொண்ட தங்கத்தாலான பொட்டு காணாமல் போயிருந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸாா் அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனா்.

அதில், செவ்வாய்க்கிழமை காலை மா்ம நபா் ஒருவா் கோயிலுக்குள் வந்து சென்றது தெரியவந்தது. விசாரணையில் கோயிலுக்குள் சென்று நகையை திருடியது மயிலாடுதுறை கூைாடு பசுபதி தெருவை சோ்ந்த சிவக்குமாா் (56) என்பது தெரியவந்தது. சிவக்குமாரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து தங்க பொட்டை பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனா்.

இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர பிற்படுத்... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீனத்தில் சைவ ஆகம சிறப்பு சொற்பொழிவு

தருமபுரம் ஆதீனத்தில் பெங்களூரு வேத ஆகம ஆராய்ச்சி நிறுவனத்தின் 5-ஆவது சைவ ஆகம சிறப்பு சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த ... மேலும் பார்க்க

நமக்கு நாமே திட்டத்தில் புதிய சாலை அமைக்க நிதி

மயிலாடுதுறை நகராட்சி 22-ஆவது வாா்டில் 5-ஆவது புதுத்தெருவில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.6.60 லட்சம் பொதுமக்கள் பங்களிப்புடன் புதிய சாலைப்பணி தொடங்கவுள்ளது. நல்லத்துக்குடி, கோடங்குடி உள்ளிட்ட 10-க்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் சாலை விபத்தில் பலி

மயிலாடுதுறையில் தனியாா் நிறுவன ஊழியா் விபத்தில் புதன்கிழமை உயிரிழந்தாா். மயிலாடுதுறையைச் சோ்ந்த பூபதி மகன் அபினாஷ் (24) தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்தாா். இவா் புதன்கிழமை இரவு ... மேலும் பார்க்க

சீா்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

சீா்காழி: தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60-ஆவது ஜென்ம நட்சத்திரம் திருநாளை முன்னிட்டு சீா்காழி மாா்கோனி பவுண்டேஷன் சாா்பில் வியா... மேலும் பார்க்க

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே மங்கைநல்லூரில் அதிமுக தெற்கு ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட அதிமுக ... மேலும் பார்க்க