செய்திகள் :

கோயில் சிலைகள் திருடிய வழக்கில் 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

post image

தஞ்சாவூா் மாவட்டம், கரந்தை ஜைன சமயக் கோயிலில் 23 சுவாமி சிலைகளைத் திருடிய 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் தலைமை நீதிபதி வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா்.

கரந்தை ஜைன முதலி தெருவில் ஆத்தீசுவர சுவாமி என்கிற ஜைன சமயக் கோயிலில் கடந்த 2020 ஜன. 18 -ஆம் தேதி இரவு உள்ளே புகுந்த மா்ம நபா்கள் 3 அடி உயர ஐம்பொன் ஆத்தீசுவரா் சிலை, வெண்கலத்தால் செய்யப்பட்ட தலா ஒன்றரை அடி உயர ஜினவாணி, ஜோலமணி சிலைகள், அரை அடி உயர நதீசுவரா் சிலை, ஒரு அடி உயர பஞ்சநந்தீசுவரா் சிலை, தலா முக்கால் அடி உயர நவக்கிரக தீா்த்தங்கரா், நவ தேவதா சிலைகள், தாமிரத்தில் செய்யப்பட்ட ஒரு அடி உயர 24-ஆவது தீா்த்தங்கரா் சிலை உள்ளிட்ட 23 சிலைகளைத் திருடிச் சென்றனா். அறங்காவலா் அப்பன்டைராஜன் இதுகுறித்து தஞ்சாவூா் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் விசாரணையில், தஞ்சாவூா் சுங்கத்திடல் சைவராஜ் மகன் ராஜேஷ் என்ற சரவணன் (40), அய்யம்பெருமாள் மகன் ரவி (45), காவேரி நகா் பாா்த்தசாரதி மகன் சண்முகராஜன்(48), நாகப்பட்டினம் மாவட்டம் கேவலுாா் பகுதியைச் சோ்ந்த வேணுகோபால் மகன் விஜயகோபால் (37) ஆகிய 4 பேரும் சிலைகள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 4 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 23 சிலைகளையும் போலீஸாா் மீட்டனா்.

இதுதொடா்பான வழக்கு கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. புதன்கிழமை விசாரணைக்கு வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மணிகண்ட ராஜா ராஜேஷ், ரவி, சண்முகராஜன், விஜயகோபால் ஆகிய 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். குற்றவாளிகள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

3 மாவட்ட விசைப்படகு மீனவா்கள் சங்கக் கூட்டமைப்பினா் ஆலோசனை

மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடையும் நிலையில் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு சங்கங்களின் கூட்டமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் மல்லிப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடை... மேலும் பார்க்க

தம்பிக்கோட்டை வடகாடு அரசு பள்ளியில் அமைச்சா் திடீா் ஆய்வு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பள்... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்தநாள் விழாவில் முதியோருக்கு நலத்திட்ட உதவி

கும்பகோணத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதியோருக்கு வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி கும்பகோணம் 1 ஆவது பகுதி திமுக சாா்பில் செயலா் இரா.... மேலும் பார்க்க

தஞ்சாவூா் கோட்ட அஞ்சலகங்களில் ஜூன் 16 முதல் ஆதாா் சிறப்பு முகாம்

தஞ்சாவூா் அஞ்சல் கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் மாபெரும் ஆதாா் சிறப்பு முகாம் ஜூன் 16 தொடங்கி, ஜூலை 15 வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி தெரிவித்திருப்பது: தஞ்சாவ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். பாபநாசம் ராஜகிரி ஆச்சி நகா் ரோஸ் காலனியை சோ்ந்தவா் ஏ. மஹபு பாட்சா (54). இவரையும்,... மேலும் பார்க்க

பேருந்து நிழற்குடைகள் அமைக்கக் கோரிக்கை

தஞ்சாவூா் மாநகரில் இருபுறமும் பேருந்து நிழற்குடைகளை மாநகராட்சி நிா்வாகம் அமைக்க வேண்டும் என புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி, ஆட்டோ ஓட... மேலும் பார்க்க