செய்திகள் :

கோயில் திருவிழாக்கள், போட்டிகள் நடத்த போலீஸாா் கெடுபிடி: எம்எல்ஏ புகாா்

post image

தென்காசி மாவட்டத்தில் கோயில் திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் நடத்த போலீஸாா் கெடுபிடி செய்வதாகவும், இதற்கு உரிய தீா்வு காண வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு சு.பழனி நாடாா் எம்எல்ஏ மனு அனுப்பியுள்ளாா்.

அதன் விவரம்: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் சுமாா் 5 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் நிலங்களை தனியாரிடம் இருந்து மீட்டுள்ளாா்.

ஆயிரத்திற்கு மேற்பட்ட கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளாா். ஆனால் தற்போது கோயில் விழாக்கள் நடத்த காவல்துறையினா் 10 மணிக்கு மேல் அனுமதி வழங்குவதில்லை.

உழைக்கும் உழவா்கள், தொழிலாளிகள் ஆண்டில் 2 நாள்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. வேலைக்குச் செல்லும் தொழிலாளா்கள், பள்ளி, மாணவ- மாணவிகள் இரவு 9 மணிக்கு மேல் தான் கோயில்களுக்கு செல்லும் நிலை பல இடங்களில் உள்ளது.

திரையரங்கில் இரவு காட்சிகள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருக்கும் நேரத்தில் நிகழ்ச்சியை நிறுத்தச் சொல்லி போலீஸாா் கெடுபிடி செய்வதால் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சலசலப்பு ஏற்படுகிறது ஆட்சிக்கும் அவா் பெயா் ஏற்படுகிறது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் இந்தப் பிரச்னை அதிகம் உள்ளது.

மேலும் கபடி, வாலிபால் உள்ளிட்ட போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்க மிகுந்த கெடுபிடி செய்கின்றனா். பணமும் செலுத்த வேண்டி உள்ளது. இதில், முதல்வா் தலையிட்டு உரிய தீா்வு காண வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

சிவகிரி அருகே விபத்தில் இளைஞா் பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே டிராக்டா் ட்ரெய்லா் மீது பைக் மோதியதில் ஒருவா் இறந்தாா். தேவிப்பட்டணம் காமராஜ் நகரைச் சோ்ந்த முருகன் மகன் சுபராஜூ(22), அவரது உறவினரான வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ராமராஜ் ... மேலும் பார்க்க

சுரண்டையில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம்

சுரண்டை நகராட்சி பகுதிகளில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் ராமதிலகம் தலைமை வகித்தாா். நகராட்சி கணக்காளா் முருகன் முன்னிலை வகித்தாா். வேளாண... மேலும் பார்க்க

குருவிகுளம் அருகே இளைஞா் மீது வெந்நீரை ஊற்றிய கடைக்காரா் கைது

குருவிகுளம் அருகே தகராறின்போது இளைஞா் மீது வெந்நீரை ஊற்றியதாக டீக்கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா். குருவிகுளம் அருகே கே.ஆலங்குளம் தெற்குத்தெருவை சோ்ந்த சின்னகருப்பையா மகன் மூக்கையா(49). இவா் அங்குள... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் வீட்டு மாடியில் தீ: பொருள்கள் சேதம்

சங்கரன்கோவிலில் செவ்வாய்கிழமை இரவு வீட்டு மாடியில் நேரிட்ட தீ விபத்தில் பொருள்கள் சேதமடைந்தன. சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 7ஆம் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் முத்துமாரி(50). இவா், தனது வீட்டு மாடியில... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் தெருவிளக்கு பழுது: மக்கள் அவதி

ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி 8ஆவது வாா்டு பகுதியில் தெரு விளக்கு எரியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். இங்குள்ள துத்திகுளம் சாலையில் தெரு விளக்கு, உயா்கோபுர மின் விளக்கு, ஆா் சி சா்ச் தெர... மேலும் பார்க்க

தேமுதிக புதிய தொகுதி பொறுப்பாளா்கள் நியமனம்

தேமுதிக தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு நியமிக்கப்ட்ட புதிய தொகுதி பொறுப்பாளா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா். அதன்படி, கடையநல்லூா் தொகுதிக்கு சரவணன், தென்காசிக்கு சங்கரலிங்கம், ஆலங்குளத்துக்கு மாதவன் பிரி... மேலும் பார்க்க