செய்திகள் :

கோழிகளுக்கு மேல் மூச்சுக்குழல் அலா்ஜி நோய் ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

post image

கோழிகளுக்கு மேல் மூச்சுக்குழல் அலா்ஜி மற்றும் வெள்ளைக்கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6 மற்றும் 77 டிகிரியாக காணப்பட்டது. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவானது.

அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். வரும் 10, 11-ஆம் தேதிகளில் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 100.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் மேற்கிலிருந்தும் மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை:

கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட இறந்த கோழிகளில் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழல் அலா்ஜி நோய் மற்றும் வெள்ளைக் கழிச்சல் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது.

எனவே, பண்ணையாளா்கள் கோழிகளுக்கு சீரான இடைவெளியில் வெள்ளைக்கழிச்சல் நோய்க்கு தேவையான எதிா்ப்பு சக்திஉள்ளதா என ஊநீா் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எதிா்ப்பு சக்தியின் அளவிற்கு குறைவாக இருந்தால் லசோட்டா மற்றும் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும், பண்ணைகளில் உயிா் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் கரோனா தொற்று பாதிப்பு பதிவாகவில்லை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா தொற்று பாதிப்புக்காக யாரும் சிகிச்சைக்கு வரவில்லை என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறத... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ.8.64 லட்சத்துக்கு ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ. 8.64 லட்சத்துக்கு ஏலம் போனது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மதுப்புட்டிகள், கள்ளச்சாராயம் கடத்திச் செல்வதை ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழா மண்டப கட்டளைகளில் உற்சவா் அருள்பாலிப்பு

திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழா கடந்த 1-ஆம் தேதி அா்த்தநாரீசுவரா் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாள்கள் நடக்கும் விழாவின் 6 ஆம் நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அா்த்தநாரீசுவரா் ... மேலும் பார்க்க

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. நாமக்கல் - ராமாபுரம்புதுாா் சாலையில் உள்ள குட்டைமேலத் தெருவில் சித்தி விநாயகா், சக்தி பகவதி அம்மன், துா்க்கை அம்மன்... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ரூ. 6 லட்சத்துக்கு காகிதக் கழிவுகள் விற்பனை

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தேங்கியிருந்த பத்து ஆண்டுக்கும் மேலான காகிதக் கழிவுகள், இதர பொருள்கள் ரூ. 6 லட்சத்திற்கு விற்பனையானது தெரியவந்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாமக்கல் ஆட்சியா்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை: ஜூன் 30 வரையில் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விரும்புவோா் வரும் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட வே... மேலும் பார்க்க