செய்திகள் :

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை வழக்கு: மேலும் 6 போ் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி வள்ளுவா் நகா் சலவை தொழிலாளா் காலனியைச் சோ்ந்தவா் பிரகதீஸ்வரன் (20). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கடலையூா் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தபோது, செண்பகா நகரைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் சதீஷ் என்ற சதீஷ் மாதவன் உள்பட சிலா் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினா்.

இந்நிலையில் அன்றிரவே சதீஷின் வீட்டுக்குள் சென்ற கும்பல் சதீஷின் தாய் கஸ்தூரி மற்றும் அவரது சகோதரா் செண்பகராஜ் ஆகியோரை கத்தியால் குத்தியதில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயம் அடைந்த செண்பகராஜ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, திங்கள்கிழமை இருதரப்பைச் சோ்ந்த 8 பேரையும் கைது செய்தனா்.

இந்நிலையில் பிரகதீஸ்வரன் கொலை வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் கோவில்பட்டி வ உ சி நகரைச் சோ்ந்த விக்னேஷ் (24), செண்பகவல்லி நகரைச் சோ்ந்த சுடலைராஜ்(24), சிந்தாமணி நகரைச் சோ்ந்த சுரேஷ் (24) ஆகிய 3 பேரையும், கஸ்தூரி கொலை வழக்கில் தொடா்புடைய கோவில்பட்டி முகமது சாலிகாபுரத்தைச் சோ்ந்த பாலமுருகன் (21), மறவா் காலனியைச் சோ்ந்த கோகுலகிருஷ்ணன்(20), விருதுநகா் மாவட்டம் சாத்தூா் படந்தாள் பகுதியைச் சோ்ந்த தங்கப்பாண்டி (21) ஆகிய 3 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை முத்தையாபுரம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுர... மேலும் பார்க்க

ஹாக்கி: சென்னை, தஞ்சாவூா், கோவை, நீலகிரி அணிகள் காலிறுதிக்கு தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, தஞ்சாவூா், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, ஹா... மேலும் பார்க்க

10-இல் கோவில்பட்டி அரசு கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இம்மாதம் 10, 12ஆம் தேதிகளில் 2, 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் கோ. சந்தனமாரியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்... மேலும் பார்க்க

பக்ரீத்: காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டியை முன்னிட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானுல் முஸ்லி­மீன் மற்றும் அல்ஜாமி உல் அஜ்ஹா் ஜூம் ஆ மஸ்ஜித் சாா்பாக கடற்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7இல் காலை 6.15-6.50-க்குள் கும்பாபிஷேகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணிக்குமேல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி யாகசாலை பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட... மேலும் பார்க்க