செய்திகள் :

கோவை குற்றாலம் செல்ல இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை!

post image

கோவை: கோவை குற்றாலத்தில் சாலைப் பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலம் வந்து ஏமாற வேண்டாம் என வனத்துறை அறிவித்துள்ளது.

கோவை நகர் பகுதியில் இருந்து மேற்கு பகுதியில் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது கோவை குற்றாலம். இயற்கை எழில் சூழ்ந்த சிறுவாணி மலைத் தொடரின் அடிவாரத்தில் வனப்பகுதி நிறைந்த இடமாக இருப்பது கோவை குற்றாலம்.

நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தினந்தோறும் அலை மோதுவது வழக்கம். இந்நிலையில் கோடை வெயில் காரணமாகவும், விடுமுறையின் பொழுது சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்து காணப்படும். ஒரு நாள் சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் இங்கு வந்தால் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக தங்களது பொழுதை கொண்டாடி மகிழ்வார்கள். கோவை நகருக்கு அருகில் அமைந்து உள்ளதால் முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது.

கோடை வெயில் தற்பொழுது அதிகரித்துக் காணப்படுவதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். மேலும் விடுமுறை நாள்கள் வர இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என வனத் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

இதனால் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி செல்லும் சாலைப் பராமரிப்புப் பணிகளை தற்பொழுது வனத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக புதன்கிழமை ஏப்ரல் 9-ம் தேதி அன்று சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லை எனவும், மேலும் மறுநாள் வியாழக்கிழமை பத்தாம் தேதி அன்று வழக்கம் போல் வேலை நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என கோவை மாவட்ட வனத் துறையினர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

எனவே இன்று அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற வேண்டாம் எனவும் வனத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுக - பாஜக கூட்டணி வலுவாகவே உள்ளது: எல்.முருகன்

நாமக்கல்: அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது, எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.நாமக்... மேலும் பார்க்க

குமரி கண்ணாடி பாலத்தில் மீண்டும் மக்களுக்கு அனுமதி!

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி பாலம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குச்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

பள்ளிக்குச் சென்றுவர தங்கள் பகுதியில் பேருந்து வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவேற்றியுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டத்துக்குச் சென்றபோத... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) ... மேலும் பார்க்க

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை: தன்கா் விமா்சனம் குறித்து முதல்வா் ஸ்டாலின் கருத்து

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள்... மேலும் பார்க்க