செய்திகள் :

கோவை: சொத்தை அபகரிக்க முயற்சி! பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

post image

கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சொத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்ததாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை, தெலுங்குபாளையம் பகுதியில் வசித்து வரும் திவ்யா (35) என்ற பெண், அவரது தந்தை சர்குணனின் வளர்ப்பு தாயார் பழனியம்மாளுக்கு சொந்தமாக செல்வபுரம், குமாரபாளையம் கிராமத்தில் உள்ள 36 சென்ட் நிலம், உயில் சாசனம் மூலம் தந்தைக்கு வந்ததாகவும், கடந்த பல வருடங்களாக சொத்தை தந்தையின் குடும்பத்தினர் அனுபவித்து வருவதாகவும், புகாரில் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலத்தை அபகரிக்க தீபா விஸ்வநாதன், ஈஸ்வரி, ரேணுகா, ராணி உள்ளிட்டவர்கள் திட்டமிட்டு உள்ளதாகவும், கடந்த ஏப்ரல் 15 ம் தேதி, ஜேசிபி, டிராக்டர், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அத்துமீறி நிலத்திற்குள் நுழைந்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி உள்ளார்.

மேலும் அவரை ஜேசிபியால் மோதுவோம் என மிரட்டியதாகவும், 30 வயதுடைய நான்கு ஆண்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், காவல் துறைக்கு தகவல் அளித்த பின்பும் அவர்கள் இடத்தை விட்டு செல்லவில்லை என திவ்யா தெரிவித்து உள்ளார்.

மேலும், இதுதொடர்பாக ஏற்கனவே கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மீண்டும் அவர்கள் அந்த இடத்தில் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையரிடம் திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில், தீபா விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை விடுத்து உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை

கனமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள ஒருசில பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் ஜூன் 21-ஆம் தேத... மேலும் பார்க்க

குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியீடு! - டிஎன்பிஎஸ்சி தலைவா்

குரூப்-1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா். மேலும், குரூப் 4 பதவிகளில் காலிப் பணியிடங்கள்... மேலும் பார்க்க

பேருந்து, மெட்ரோவில் சக்கர நாற்காலிக்கு இடம் கட்டாயம்: புதிய வரைவு வழிகாட்டுதல் வெளியீடு!

மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற போக்குவரத்துப் பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் சக்கர நாற்காலிகள் வைக்க இடம், பாதுகாப்பு பெல்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கட்டாயமாக்கும் வக... மேலும் பார்க்க

கீழடி அகழ்வாய்வை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம்! - பாஜக

கீழடி அகழ்வாய்வை அரசியலுக்கு திமுக பயன்படுத்தக் கூடாது என தமிழக பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்... மேலும் பார்க்க

காட்பாடி - திருப்பதி இரவு நேர மெமு ரயில் இன்று ரத்து!

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் இரவு நேர மெமு ரயில் திங்கள்கிழமை (ஜூன் 16), ஜூன் 18 ஆகிய இரு நாள்கள் ரத்து செய்யப்படவுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை, துப்பாக்கி கலாசாரம் அதிகரிப்பு! - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கள்ளத் துப்பாக்கி கலாசாரம், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டதாக அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளாா். இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: பாமக வேலூா... மேலும் பார்க்க