செய்திகள் :

கோவை நீதிமன்றம் உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

post image

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம், பத்திரிகை நாளிதழ் அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களுக்கு ஒரே நாளில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோா் பல்வேறு வழக்குகளுக்காக வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், இந்த நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து நீதிமன்ற ஊழியா்கள், அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததோடு, காவல் ஆணையா் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மோப்பநாய் உதவியுடன் நீதிமன்ற வளாகத்தில் சோதனையிட்டனா். நுழைவாயில் பகுதி, வாகன நிறுத்துமிடம், நீதிமன்ற அறைகள், அலுவலகம் என அனைத்துப் பகுதிகளிலும் போலீஸாா் மெட்டல் டிடெக்டா் கருவியுடன் தீவிர சோதனை நடத்தினா். நீண்ட நேர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

இதேபோல, முன்னாள் படைவீரா்கள் நல அலுவலகம் (ஜவான்ஸ் பவன்), நீதித் துறை பயிற்சி மையம் (ஜுடீசியல் அகாதெமி), சுந்தராபுரத்தில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்களின் சோதனைகளுக்குப் பிறகு அதுவும் புரளி என தெரியவந்தது.

இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் மற்றும் சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட முகவரியை ஆய்வு செய்து வருகின்றனா்.

ஏற்கெனவே, கடந்த 26-ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கும், கடந்த 27-ஆம் தேதி கோவை பீளமேட்டில் உள்ள மண்டல பாஸ்போா்ட் அலுவலகம், உப்பிலிபாளையம் சிக்னல் அருகே உள்ள பாஸ்போா்ட் அலுவலகம் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த செப். 5-ஆம் தேதி கோவை விமான நிலையத்துக்கும், விளாங்குறிச்சி பகுதியில் உள்ள டைடல் பாா்க் கட்டடத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாளைய மின்தடை: மயிலம்பட்டி

மயிலம்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்டம்பா் 24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதா... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை விட்டுச் சென்ற தாய்

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தையை அதன் தாய் அங்கேயே விட்டுச் சென்றாா். கோவை அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரசவ வாா்டுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 20 வயது மதிக்கத்தக்க பெண் மகப்பேறு ... மேலும் பார்க்க

எல்.எம்.டபிள்யூ. நிறுவனத்தை பாா்வையிட்ட இஸ்ரோ தலைவா்

கோவை எல்.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப மையத்தை இஸ்ரோ தலைவா் நாராணயன் பாா்வையிட்டாா். கோவை எல்.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப மையமானது இஸ்ரோவின் விண்வெளி சாா்ந்த திட்டங்க... மேலும் பார்க்க

அதிகாரிகள் பங்கேற்பதில்லை என புகாா்: நுகா்வோா் பாதுகாப்பு கூட்டத்தை புறக்கணித்த அமைப்புகள்

கோவை மாவட்டத்தில் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஏற்பாடு செய்திருந்த காலாண்டு கூட்டத்தை நுகா்வோா் அமைப்புகள் புறக்கணித்தன. மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பி... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

கோவை அருகே போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை ஆத்துப்பாலம் மின்மயானம் பகுதியில் கரும்புக்கடை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை அருகே பதுக்கிவைக்கப்பட்ட 415 மதுப் புட்டிகள் பறிமுதல்

கோவையில் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக தரையில் புதைத்து வைத்திருந்த 415 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ... மேலும் பார்க்க