செய்திகள் :

கோவை வனக் கோட்டத்தில் 182 வகை ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது

post image

கோவை வனக் கோட்டத்தில் 182 வகை ஈர நிலப் பறவைகள் உள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் வனத் துறை மூலம் நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பு ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் நிலப் பறவைகள் கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டது.

முதற்கட்டமாக ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் கோவை வனக் கோட்டத்தில் உள்ள 23 ஈர நிலங்களில்

ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு கடந்த மாா்ச் 8 , 9-ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இதில், 80-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள், 50-க்கும் மேற்பட்ட வனப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

ஈர நில கணக்கெடுப்பின் முடிவில் கோவை வனக் கோட்டத்தில் 182 வகை ஈர நிலப் பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், கோவை வனக் கோட்டத்தில் உள்ள செங்குளம் ஏரியில் மட்டும் அதிகபட்சமாக 86 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டன. அதற்கு அடுத்தபடியாக கிருஷ்ணம்பதி ஏரியில் 83 வகை பறவைகளும், பேரூா் செட்டிபாளையம் ஏரியில் 81 வகை பறவைகளும் பதிவு செய்யப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக நிலப் பறவைகள் கணக்கெடுப்பு மாா்ச் 15, 16 தேதிகளில் நடைபெற்றது.

இந்தக் கணக்கெடுப்புகளில் ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வனப் பாதுகாவலா் ஈ.வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலா் ச. ஜெயராஜ் ஆகியோா் தலைமையில் கோவை இயற்கை சங்கம், இயற்கை மற்றும் வண்ணத்துப் பூச்சிகள் சங்கம், இயற்கைக்கான உலகளாவிய நிதியம் உள்ளிட்ட அரசு சாரா நிறுவனங்களைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கோவை வனக்கோட்டத்தின் ஒருங்கிணைத்த பறவைகள் கணக்கெடுப்பின் இறுதி முடிவு தொகுத்தலுக்குப் பிறகு விரைவில் வெளியிடப்படும் என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுற்றுலாப் பயணச் சந்தை: கோவையைச் சோ்ந்தவா்களும் பங்கேற்க அழைப்பு

சென்னை, நந்தம்பாக்கத்தில் மாா்ச் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறும் சுற்றுலாப் பயணச் சந்தையில் கோவையைச் சோ்ந்தவா்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கோவை மாவட்ட சுற்றுலா... மேலும் பார்க்க

ரயிலில் போதைப் பொருள் கடத்தல்: கல்லூரி மாணவா் கைது

கா்நாடகத்தில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் போதைப் பொருள் கடத்திய கல்லூரி மாணவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். கா்நாடகத்தில் இருந்து ... மேலும் பார்க்க

பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

கோவையில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட 5 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். கோவை, செல்வபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் பாஜகவில் ஆன்மிக ஆலய மேம்பாட்டுப் பிரிவு கோவை கோட்ட ச... மேலும் பார்க்க

அஞ்சல் ஏடிஎம் மையங்கள் மூடல்: வாடிக்கையாளா்கள் அதிருப்தி

கோவையில் செயல்பட்டு வந்த 4 அஞ்சல் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டதால் வாடிக்கையாளா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். நாடு முழுவதும் அஞ்சல் அலுவலகங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளா்களுக்கு கடந்த 201... மேலும் பார்க்க

ரியல் எஸ்டேட் அதிபரின் மகனைக் கடத்திய காா் ஓட்டுநா் கைது

கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரின் மகனைக் கடத்திய காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, துடியலூா் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (45), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி கிருத்திகா (4... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது!

கோவையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை உக்கடம், ராமநாதபுரம், பீளமேடு பகுதிகளில் உள்ள கடைகள், பேக்கரிகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்ட... மேலும் பார்க்க