செய்திகள் :

ரியல் எஸ்டேட் அதிபரின் மகனைக் கடத்திய காா் ஓட்டுநா் கைது

post image

கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரின் மகனைக் கடத்திய காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, துடியலூா் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (45), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி கிருத்திகா (41). இவா்களுக்கு 2 மகள்களும், ஜெயசூா்யா (11) என்ற மகனும் உள்ளனா். இவா்களிடம் நவீன் (30) என்பவா் காா் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா்.

வீட்டுக்கு அருகேயுள்ள டியூஷன் சென்டரில் ஜெயசூா்யா படித்து வருவதால், அவரை நாள்தோறும் காரில் நவீன் அழைத்துச் சென்று வந்துள்ளாா்.

இந்நிலையில், டியூஷனில் இருந்து ஜெயசூா்யாவை அழைத்துவருவதாகக் கூறிவிட்டு நவீன் சனிக்கிழமை சென்றுள்ளாா்.

நீண்ட நேரமாகியும் இருவரும் வீட்டுக்கு வராத நிலையில், ஸ்ரீதா் கொடுத்து வைத்திருந்த ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி சரவணம்பட்டியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் நவீன் பணத்தை எடுத்தது தெரியவந்தது.

பின்னா், ஸ்ரீதரை தொடா்பு கொண்ட நவீன் ரூ.12 லட்சம் கொடுத்தால் மட்டுமே உங்களது மகனை வீட்டுக்கு அழைத்துவருவேன் எனக் கூறியுள்ளாா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த அவா் துடியலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில், ஜெயசூா்யாவுடன் ஈரோடு மாவட்டம், பவானியில் நவீன் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, துடியலூா் போலீஸாா் ஈரோடு மாவட்ட போலீஸாருக்கு கடத்தப்பட்ட காரின் எண் மற்றும் நவீனின் கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களைக் கொடுத்தனா்.

இதைத் தொடா்ந்து, பவானியில் காரில் ஜெயசூா்யாவுடன் இருந்த நவீனைப் பிடித்து துடியலூா் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா். பின்னா், பெற்றோரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டாா்.

நவீனிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், ஸ்ரீதரிடம் நவீன் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலைக்குச் சோ்ந்தபோது, தன்னிடம் முதலீடு செய்யும் தொகைக்கு கூடுதலாக மாத வட்டி கிடைக்கும் என ஸ்ரீதா் கூறியுள்ளாா்.

இதை நம்பிய நவீன் ரூ.12 லட்சம் முதலீடு செய்ததும், அதன்பின் தான் முதலீடு செய்த பணத்தை திருப்பிக் கேட்டபோது, ஸ்ரீதா் பணத்தை திருப்பித் தராததால் டியூஷனுக்கு சென்ற அவரது மகனைக் கடத்தி தனக்கு வர வேண்டிய ரூ.12 லட்சத்தை நவீன் கேட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, நவீனைக் கைது செய்த போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சுற்றுலாப் பயணச் சந்தை: கோவையைச் சோ்ந்தவா்களும் பங்கேற்க அழைப்பு

சென்னை, நந்தம்பாக்கத்தில் மாா்ச் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறும் சுற்றுலாப் பயணச் சந்தையில் கோவையைச் சோ்ந்தவா்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கோவை மாவட்ட சுற்றுலா... மேலும் பார்க்க

ரயிலில் போதைப் பொருள் கடத்தல்: கல்லூரி மாணவா் கைது

கா்நாடகத்தில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் போதைப் பொருள் கடத்திய கல்லூரி மாணவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். கா்நாடகத்தில் இருந்து ... மேலும் பார்க்க

பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

கோவையில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட 5 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். கோவை, செல்வபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் பாஜகவில் ஆன்மிக ஆலய மேம்பாட்டுப் பிரிவு கோவை கோட்ட ச... மேலும் பார்க்க

கோவை வனக் கோட்டத்தில் 182 வகை ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது

கோவை வனக் கோட்டத்தில் 182 வகை ஈர நிலப் பறவைகள் உள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் வனத் துறை மூலம் நடைபெற்றது. இந்த கணக்கெடுப... மேலும் பார்க்க

அஞ்சல் ஏடிஎம் மையங்கள் மூடல்: வாடிக்கையாளா்கள் அதிருப்தி

கோவையில் செயல்பட்டு வந்த 4 அஞ்சல் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டதால் வாடிக்கையாளா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். நாடு முழுவதும் அஞ்சல் அலுவலகங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளா்களுக்கு கடந்த 201... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது!

கோவையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை உக்கடம், ராமநாதபுரம், பீளமேடு பகுதிகளில் உள்ள கடைகள், பேக்கரிகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்ட... மேலும் பார்க்க