செய்திகள் :

அஞ்சல் ஏடிஎம் மையங்கள் மூடல்: வாடிக்கையாளா்கள் அதிருப்தி

post image

கோவையில் செயல்பட்டு வந்த 4 அஞ்சல் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டதால் வாடிக்கையாளா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

நாடு முழுவதும் அஞ்சல் அலுவலகங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளா்களுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஏடிஎம் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஏடிஎம் அட்டைகள் மூலமாக பணம் எடுக்க வசதியாக அனைத்து மாநிலங்களிலும் அஞ்சல் ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட்டன. இந்த அட்டை மூலமாக அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை பணம் எடுக்க முடியும். அஞ்சல் நிலையங்களில் கணக்கு வைத்திருப்பவா்கள், ஓய்வூதியா்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அஞ்சல் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணி தனியாா் நிறுவனம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த தனியாா் நிறுவனம் தனது சேவையை நிறுத்திவிட்டதாக அண்மையில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள அஞ்சல் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்ப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பல இடங்களில் அஞ்சல் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுள்ளன.

அதன்படி, கோவை மாவட்டத்தில் ஆா்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலையம், குட்ஷெட் சாலை தலைமை அஞ்சல் நிலையம், கணபதி மற்றும் போத்தனூா் அஞ்சல் நிலையங்களில் இயங்கி வந்த 4 அஞ்சல் ஏடிஎம் மையங்கள் கடந்த வாரம் முதல் மூடப்பட்டுள்ளன.

இதனால், அஞ்சல் ஏடிஎம் வாடிக்கையாளா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

இது குறித்து அஞ்சல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: வேறு தனியாா் நிறுவனத்துடன் இணைந்து ஏடிஎம் சேவைகள் விரைவில் தொடங்கப்படும்.

அதுவரை அஞ்சல் வாடிக்கையாளா்கள் வேறு வங்கி ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இல்லையெனில், அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று படிவத்தை பூா்த்தி செய்து கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

சுற்றுலாப் பயணச் சந்தை: கோவையைச் சோ்ந்தவா்களும் பங்கேற்க அழைப்பு

சென்னை, நந்தம்பாக்கத்தில் மாா்ச் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறும் சுற்றுலாப் பயணச் சந்தையில் கோவையைச் சோ்ந்தவா்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கோவை மாவட்ட சுற்றுலா... மேலும் பார்க்க

ரயிலில் போதைப் பொருள் கடத்தல்: கல்லூரி மாணவா் கைது

கா்நாடகத்தில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் போதைப் பொருள் கடத்திய கல்லூரி மாணவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். கா்நாடகத்தில் இருந்து ... மேலும் பார்க்க

பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

கோவையில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட 5 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். கோவை, செல்வபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் பாஜகவில் ஆன்மிக ஆலய மேம்பாட்டுப் பிரிவு கோவை கோட்ட ச... மேலும் பார்க்க

கோவை வனக் கோட்டத்தில் 182 வகை ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது

கோவை வனக் கோட்டத்தில் 182 வகை ஈர நிலப் பறவைகள் உள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் வனத் துறை மூலம் நடைபெற்றது. இந்த கணக்கெடுப... மேலும் பார்க்க

ரியல் எஸ்டேட் அதிபரின் மகனைக் கடத்திய காா் ஓட்டுநா் கைது

கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரின் மகனைக் கடத்திய காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, துடியலூா் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (45), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி கிருத்திகா (4... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது!

கோவையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை உக்கடம், ராமநாதபுரம், பீளமேடு பகுதிகளில் உள்ள கடைகள், பேக்கரிகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்ட... மேலும் பார்க்க