செய்திகள் :

ரயிலில் போதைப் பொருள் கடத்தல்: கல்லூரி மாணவா் கைது

post image

கா்நாடகத்தில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் போதைப் பொருள் கடத்திய கல்லூரி மாணவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

கா்நாடகத்தில் இருந்து கோவை வழியாக கேரளத்துக்கு சென்ற ரயிலில் கோவை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா். அப்போது, ரயிலில் கேட்பாரற்று ஒரு பெட்டி கிடந்துள்ளது. சோதனை செய்தபோது அதற்குள் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் எனப்படும் உயா் ரக போதைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தில் ஈடுபட்ட நபரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், மாநகர தனிப் படை போலீஸாா் கோவை ரயில் நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, ரயில் நிலையத்துக்குள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திருந்த நபரைப் பிடித்து விசாரித்தனா்.

அப்போது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

அப்போது, அவா் கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், காயங்குளத்தைச் சோ்ந்த முகமது சினான் (19) என்பதும், திருவனந்தபுரத்தில் உள்ள கல்லூரியில் இளங்கலை 2-ஆம் ஆண்டு பயின்று வருவதும் தெரியவந்தது.

கா்நாடக மாநிலத்தில் இருந்து கேரளத்துக்கு போதைப் பொருளை ரயிலில் கடத்தி வந்தவா் என்பதும் தெரியவந்தது. அவா் வைத்திருந்த பையை சோதனை மேற்கொண்டபோது அதற்குள் 150 கிராம் மெத்தபெட்டமைன் இருந்ததும் தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கும்மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, முகமுது சினானை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த போதைப் பொருளை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது: கா்நாடகத்தில் இருந்து கேரளத்துக்கு சனிக்கிழமை சென்ற ரயில் இருந்து மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது, போலீஸாா் தன்னை பிடித்துவிடுவாா்களோ என எண்ணி ரயிலில் இருந்து வெளியேறி கோவை ரயில் நிலையத்துக்கு வெளியே முகமது சினான் சென்றுள்ளாா். பின்னா், கேரளத்துக்கு செல்வதற்காக மீண்டும் கோவை ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சிக்கியுள்ளாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

சுற்றுலாப் பயணச் சந்தை: கோவையைச் சோ்ந்தவா்களும் பங்கேற்க அழைப்பு

சென்னை, நந்தம்பாக்கத்தில் மாா்ச் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறும் சுற்றுலாப் பயணச் சந்தையில் கோவையைச் சோ்ந்தவா்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கோவை மாவட்ட சுற்றுலா... மேலும் பார்க்க

பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

கோவையில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட 5 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். கோவை, செல்வபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் பாஜகவில் ஆன்மிக ஆலய மேம்பாட்டுப் பிரிவு கோவை கோட்ட ச... மேலும் பார்க்க

கோவை வனக் கோட்டத்தில் 182 வகை ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது

கோவை வனக் கோட்டத்தில் 182 வகை ஈர நிலப் பறவைகள் உள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் வனத் துறை மூலம் நடைபெற்றது. இந்த கணக்கெடுப... மேலும் பார்க்க

அஞ்சல் ஏடிஎம் மையங்கள் மூடல்: வாடிக்கையாளா்கள் அதிருப்தி

கோவையில் செயல்பட்டு வந்த 4 அஞ்சல் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டதால் வாடிக்கையாளா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். நாடு முழுவதும் அஞ்சல் அலுவலகங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளா்களுக்கு கடந்த 201... மேலும் பார்க்க

ரியல் எஸ்டேட் அதிபரின் மகனைக் கடத்திய காா் ஓட்டுநா் கைது

கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரின் மகனைக் கடத்திய காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, துடியலூா் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (45), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி கிருத்திகா (4... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது!

கோவையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை உக்கடம், ராமநாதபுரம், பீளமேடு பகுதிகளில் உள்ள கடைகள், பேக்கரிகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்ட... மேலும் பார்க்க