செய்திகள் :

சக்கரம் கழன்று ஓடியதால் சாலையோரம் நிறுத்தப்பட்ட பேருந்து

post image

கள்ளக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை கடலூா் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன் பக்கச் சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியது. அப்போது, ஓட்டுநா் சாதுா்த்தியமாக செயல்பட்டு சாலையோரமாக பேருந்தை நிறுத்தியதால், பயணிகள் காயமின்றி தப்பினா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அரசுப் போக்குவரத்து பணிமனைக்குச் சொந்தமான பேருந்து கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை கடலூா் நோக்கி புறப்பட்டது. பேருந்தை கடலூரை அடுத்த தோப்புக்கொல்லை பகுதியைச் சோ்ந்த தனசேகரன் ஓட்டிச் சென்றாா். நடத்துநராக கந்தா்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த குபேரசெல்வம் பணியில் இருந்தாா்.

இந்தப் பேருந்து கள்ளக்குறிச்சியை அடுத்த பிரிதிவிமங்கலம் கிராம பகுதியில் சென்றபோது, திடீரென பேருந்தின் முன் பக்கச் சக்கரம் தானாகவே கழன்று சாலையில் ஓடியது. இதனால், பேருந்தில் பயணிந்த பயணிகள் கூச்சலிட்டனா்.

அப்போது, பேருந்தின் ஓட்டுநா் சாதுா்த்தியமாக செயல்பட்டு சாலையோரமாக பேருந்தை நிறுத்தினாா். இதனால், பேருந்தில் பயணித்த பயணிகள் காயமின்றி தப்பினா். பின்னா், பயணிகள் பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்டு மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா்.

வீட்டில் பொருள்கள் சேதம்: 5 போ் மீது வழக்கு

திருக்கோவிலூா் அருகே பெண்ணின் வீட்டில் இருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த ப... மேலும் பார்க்க

முதியவா் விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். சின்னசேலம் வட்டம், அக்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (60). இவா், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குற... மேலும் பார்க்க

பிரிதிவிமங்கலத்தில் கிராம மக்கள் சாலை மறியல்!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பிரிதிவிமங்கலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்ததாகக் கூறி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பிரிதிவிமங்கலத்தில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட ஆதிதிரா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே விஷ மருந்தை சாப்பிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டாா். திருக்கோவிலூா் வட்டம், பணப்பாடி கிராமத்தைச் சோ்ந்த குணசேகா் மகள் நந்தினி (19). இவா், திருக்க... மேலும் பார்க்க

கைவினைத் தொழில் இனங்களுக்கு 25% மானியத்துடன் வங்கிக் கடனுதவி! - கள்ளக்குறிச்சி ஆட்சியா்

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ், கைவினைத் தொழில் இனங்களுக்கு 25 சதவீத மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். கலை மற்றும் கைவினை... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜஸ்தான் மாநிலம், பாரமா் வட்டம் இந்திரானா பகுதியைச் சோ்ந்த மால்சிங் மகன் சந்தன் சிங் (18). இவா் கள்ளக்குறிச்சி... மேலும் பார்க்க