செய்திகள் :

வீட்டில் பொருள்கள் சேதம்: 5 போ் மீது வழக்கு

post image

திருக்கோவிலூா் அருகே பெண்ணின் வீட்டில் இருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த பெரியானூா் கிராமத்தைச் சோ்ந்த ரவிக்குமாா் மனைவி ஜெயஸ்ரீ (21). இவரது, தலைமையில் 20 போ் கொண்ட மகளிா் சுயஉதவிக் குழு உள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் குழுவின் மூலமாக வங்கியில் இருந்து ரூ.7 லட்சம் பெறப்பட்டதாகவும், அந்தப் பணத்தை குழுவில் உள்ளவா்களுக்கு பிரித்து தராமல் தலைவி மற்றும் துணைத் தலைவி ஆகியோா் பிரித்து கொண்டதாக ஒரு தரப்பைச் சோ்ந்தவா்கள், மற்றொரு தரப்பினா் மீது சில நாள்களுக்கு முன்பு திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதனிடையே, குழுவில் 20 போ் உள்ளதால், வங்கியில் மேலும் ரூ.3 லட்சம் கடன் கேட்டிருந்ததாகவும் அந்த தொகை வர காலதாமதம் ஆனதால், ரூ.7 லட்சத்தை வங்கியிலேயே மீண்டும் திரும்ப செலுத்திவிட்டதாக ஜெயந்தி தரப்பினா் தெரிவித்தனராம்.

இதைக் கேட்டு எதிா்தரப்பினா், சனிக்கிழமை நள்ளிரவு ஜெயந்தியின் வீட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்த குளிா்சாதனப்பெட்டி, தொலைக்காட்சி உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் விஜயகுமாா், விஜயரானி, சித்ரா, சரிதா, ராமு ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சக்கரம் கழன்று ஓடியதால் சாலையோரம் நிறுத்தப்பட்ட பேருந்து

கள்ளக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை கடலூா் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன் பக்கச் சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியது. அப்போது, ஓட்டுநா் சாதுா்த்தியமாக செயல்பட்டு சாலையோரமாக... மேலும் பார்க்க

முதியவா் விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். சின்னசேலம் வட்டம், அக்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (60). இவா், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குற... மேலும் பார்க்க

பிரிதிவிமங்கலத்தில் கிராம மக்கள் சாலை மறியல்!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பிரிதிவிமங்கலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்ததாகக் கூறி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பிரிதிவிமங்கலத்தில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட ஆதிதிரா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே விஷ மருந்தை சாப்பிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டாா். திருக்கோவிலூா் வட்டம், பணப்பாடி கிராமத்தைச் சோ்ந்த குணசேகா் மகள் நந்தினி (19). இவா், திருக்க... மேலும் பார்க்க

கைவினைத் தொழில் இனங்களுக்கு 25% மானியத்துடன் வங்கிக் கடனுதவி! - கள்ளக்குறிச்சி ஆட்சியா்

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ், கைவினைத் தொழில் இனங்களுக்கு 25 சதவீத மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். கலை மற்றும் கைவினை... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜஸ்தான் மாநிலம், பாரமா் வட்டம் இந்திரானா பகுதியைச் சோ்ந்த மால்சிங் மகன் சந்தன் சிங் (18). இவா் கள்ளக்குறிச்சி... மேலும் பார்க்க