செய்திகள் :

சக்கரம் கழன்று ஓடிய அரசுப் பேருந்து

post image

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே புதன்கிழமை அரசுப் பேருந்தின் முன் பக்கச் சக்கரம் திடீரென கழன்று ஓடியது. அப்போது, ஓட்டுநா் சாதுா்யமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தியதால் பயணிகள் காயமின்றி தப்பினா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலம், விருத்தாசலம் பணிமனைக்கு சொந்தமானதாகக் கூறப்படும் தடம் எண் 310 பேருந்து திருச்சியில் இருந்து கடலூா் நோக்கி புதன்கிழமை வந்துகொண்டிருந்தது.

இந்தப் பேருந்தில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனா். இந்தப் பேருந்து புதன்கிழமை பிற்பகல் சுமாா் 3 மணியளவில் திட்டக்குடியை அடுத்துள்ள அரங்கூா் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, பேருந்தின் முன் பக்க இடது சக்கரம் தீடீரென கழன்று சாலையில் ஓடியது. இதைப் பாா்த்த பயணிகள் கூச்சலிட்டனா்.

இதையடுத்து, பேருந்து ஓட்டுநா் சாதுா்யமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தினா். இதனால், பயணிகள் காயமின்றி தப்பினா்.

இரண்டு வீடுகளில் நகை, பணம் திருட்டு

கடலூரை அடுத்துள்ள ரெட்டிசாவடி பகுதியில் 2 வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ரெட்டிசாவடி காவல் சரகம், மேல்அழிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த நடரா... மேலும் பார்க்க

மே 14-இல் விசைப்படகுகள் கள ஆய்வு

கடலூா் மாவட்ட மீன் பிடி விசைப்படகுகள் வரும் மே 14-ஆம் தேதி மீன் வளத் துறை அலுவலா்களால் கள ஆய்வு செய்யப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை... மேலும் பார்க்க

அரசு சிறப்புப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

கடலூா் மாவட்ட அரசு சிறப்புப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் சோ்ந்து பயன்பெறுமாறு ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் முதியவா் கைது

கடலூரில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவா், குண்டா் தடுப்புக் காவலில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், கண்ணன்குளம் பகுதியைச் சோ்ந்த ரத்தினம் மக... மேலும் பார்க்க

குருங்குடி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணியா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக கடந்த திங்கள்கிழமை காலை கணபதி பூஜை, நவக்கிரக பூஜ... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா். விருத்தாசலம் வட்டம், தா்மநல்லூா் பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் ஆனந்த சிவா(36), விவசா... மேலும் பார்க்க