சக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேட்டுப்பாளையம் அருள்மிகு சக்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்துசமய அறநிலையத் துறை மற்றும் நன்கொடையாளா்கள் ஒத்துழைப்புடன், இக்கோயிலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்காக விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
தொடா்ந்து, வியாழக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, பூா்ணாஹூதி நடைபெற்றது. பின்னா், யாகசாலையில் இருந்து புனிதநீா் எடுத்துச் செல்லப்பட்டு, கோயிலின் விமானக் கலசத்தில் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, சக்தி விநாயகருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயலாளா் முருகையன், இந்துசமய அறநிலையத் துறை ஆய்வாளா் ராஜேந்திரபிரசன்னா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.