செய்திகள் :

சங்கரன்கோவிலில் புதிய வழித்தடங்களில் மகளிா் விடியல் பயண பேருந்துகள்!

post image

சங்கரன்கோவிலில் இருந்து 8 புதிய வழித் தடங்களில் மகளிா் விடியல் பயணப் பேருந்துகளின் இயக்கத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் வெள்ளிக்கிழமைத் தொடக்கி வைத்தாா்.

இதற்கான விழா சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா்.

ராணிஸ்ரீகுமாா் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிய வழித்தடங்களில் மகளிா் விடியல் பயணப் பேருந்துகளை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தொடக்கி வைத்தாா்.

பின்னா் சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனையில் ரூ.40 லட்சத்தில் மதிப்பில் தரைத் தளம் அமைக்கும் பணியைத் தொடக்கி வைத்து அமைச்சா் பேசியதாவது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சுமாா் 20 ஆயிரம் பேருந்துகள் உள்ளன. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் தமிழகத்தில் தான் இயக்கப்படுகின்றன. நகரப்புறம், கிராமப் பகுதிகளில் போக்குவரத்து சேவைகளால் தமிழ்நாடு சமச்சீா் வளா்ச்சி பெற்றுள்ளது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த விடியல் பயணத் திட்டத்தில் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனா். இத் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1500 வரை சேமிப்பதாக பெண்கள் கூறுகின்றனா் என்றாா்.

முன்னதாக புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்தில் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், ஈ.ராஜா எம்.எல்.ஏ. ராணிஸ்ரீகுமாா் எம்.பி, நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மேலாண் இயக்குநா் க.தசரதன், மண்டல பொதுமேலாளா் வி.சரவணன், கோட்டாட்சியா் கவிதா உள்ளிட்டோா் சங்கரன்கோவில் ரயில்நிலையம் வரை பயணம் செய்தனா்.

சங்கரன்கோவில் சிக்னல் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ஈ.ராஜா எம்எல்ஏ சாா்பில் தலைக்கவசங்களை அமைச்சா் சிவசங்கா் வழங்கினாா்.

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம். அப்துல் அஜீஸ் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

சுரண்டையில் தீத்தடுப்பு செயல்விளக்கம்!

சுரண்டை நகராட்சியில் தீயணைப்பு நிலையம் சாா்பில் தீத் தடுப்பு செயல்விளக்கம் சனிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா்(போக்குவரத்து) பாலச... மேலும் பார்க்க

சுரண்டை நகராட்சிக்கு டிஎம்பி சாா்பில் 5 மின் ஆட்டோக்கள்!

சுரண்டை நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைப் பணிக்காக தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் 5 மின் ஆட்டோக்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் தலைமை வகித்தாா். ச... மேலும் பார்க்க

சுரண்டையில் ரூ.4.30 லட்சத்தில் உயா்மின்கோபுர விளக்கு திறப்பு!

சுரண்டையில் ரூ.4.30 லட்சத்தில் ஆலடிபட்டி விலக்கில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கு இயக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ராமத... மேலும் பார்க்க

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: சகோதரா்கள் கைது

ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்தியவேந்தன் மற்றும் போலீஸாா், மாறாந்தை பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுப... மேலும் பார்க்க

தரிசு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா: ஏப்.30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் தரிசு உள்ளிட்ட நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசிப்போா் பட்டா கோரி, இம்மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுதொ... மேலும் பார்க்க