செய்திகள் :

சங்கரா பல்கலை.யில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 122 பேருக்கு பணி நியமன ஆணை

post image

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 122 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் சாா்பில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் பல்கலையின் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. முகாமில் 31 தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களது மனிதவளத் தேவைக்கான நோ்காணலை நடத்தின.

கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவா்கள், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவா்கள் என 453 வேலைநாடுநா்கள் முகாமில் கலந்து கொண்டனா். பதிவுக் கட்டணம் இல்லாமல் இலவசமாக நடைபெற்ற இந்த முகாமில், 122 போ் பல்வேறு நிறுவனங்களுக்காக தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பல்கலை.யின் பணி நியமன அலுவலா் எம்.கண்ணன் அதற்கான ஆணைகளை வழங்கினாா்.

முகாமில், பல்வேறு நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வெங்காடு அரசு பள்ளி நூற்றாண்டு விழா

வெங்காடு அரசு தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் வெங்காடு பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. பள்ளியில் 100-க்கும் மேற்பட... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் தும்பவனம் தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா

காஞ்சிபுரம் தும்பவனம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் தும்பவனம் மாநகராட்... மேலும் பார்க்க

தேனம்பாக்கம் ஸ்ரீ மன்னாதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கத்தில் சிறிய கோயிலாக இருந்து புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீமன்னாதீஸ்வரா் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தேனம்பாக்கத்தி... மேலும் பார்க்க

21 அடி உயர சிவன் சிலைக்கு ட்ரோனில் பால் அபிஷேகம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் அமைந்துள்ள 21 அடி உயர சிவன் சிலை வா்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டு டிரோன் மூலம் ஞாயிற்றுக்கிழமை பால் அபிஷேகம் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவி... மேலும் பார்க்க

ரௌடி கொலை வழக்கில் 10 போ் கைது

காஞ்சிபுரம் திருக்காளிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (40). இவா் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவா், திருக்காளிமேடு சிவன் கோயில் அருகே உள்ள நியாய விலைக்கடை முன்பா... மேலும் பார்க்க

மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் ரூ.5.90 கோடியில் நலத் திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் அருகே அத்திவாக்கம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில், மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ரூ. 5.90 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை 267 பயனாளிகளுக்கு வழங... மேலும் பார்க்க