செய்திகள் :

சஞ்சய் வெர்மா யார்? தேனிலவு கொலையில் திடீர் திருப்பம்!

post image

மேகாலயத்தில் நடந்த தேனிலவு கொலையில், இதுவரை சஞ்சய் வெர்மா யார் என்ற கேள்விக்கு காவல்துறையினர் விடை கண்டுபிடித்துள்ளனர்.

கணவர் ராஜா ரகுவன்ஷியை, மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கூலிப் படை வைத்துக் கொலை செய்த சோனம், தனது காதலன் ராஜ் குஷ்வாஹா பயன்படுத்திய செல்போன் எண்ணைத்தான், அவர் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, சஞ்சய் வெர்மா என்ற கற்பனைப் பெயரில் செல்போனில் பதிவு செய்திருந்ததைக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

செல்போன் எண்களின் விவரங்களை அறியும் தனியார் செயலிகளிலும் இந்த எண் சஞ்சய் வெர்மா என்று பதிவாகியிருந்ததால், காவல்துறையினருக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த எண்ணை ராஜ் குஷ்வாஹா பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குஷ்வாஹா எண்ணை யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, சஞ்சய் என்று சோனம் பதிவு செய்து வைத்திருந்தார். இந்த எண்ணிலிருந்து, சோனம் செல்போன் எண்ணுக்கு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8 வரை அதாவது 39 நாள்களில் 234 முறை அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் குறைந்தது 30 முதல் 60 வினாடிகள் பேசப்பட்டுள்ளதும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

அகமதாபாத் விபத்து: 223 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 223 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 11:50 மணி நிலவரப்படி 204 உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று சிவில் மருத்துவமனை கண்க... மேலும் பார்க்க

நன்றி! ஆனால்... டிரம்ப்பின் வருகை அழைப்பை நிராகரித்தது பற்றி மோடி கூறியதென்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வருகை அழைப்பை நிராகரித்தது ஏன்? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட... மேலும் பார்க்க

தில்லியில் முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை!

தில்லியில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.... மேலும் பார்க்க

அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் குற்றச்சாட்டு

அசாம் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக, பல்வேறு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான சமூக வலைதள கணக்குகள் செயல்படுவதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா குற்றம்சாட்டியுள்ளார். பத்த... மேலும் பார்க்க

மோகன்லாலின் ஊட்டி பங்களாவின் ஒரு நாள் வாடகை இவ்வளவா?

மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் மோகன்லாலுக்குச் சொந்தமான ஊட்டி பங்களாவில் பயணிகள் தங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அது தொடர்பான அனைத்துத்தகவல்களும் தற்போது சுற்றுலா வழிகாட்டும... மேலும் பார்க்க

தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கங்கை நதி! காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேர்தல் பிரசாரத்துக்காக கங்கை நதி தூய்மையை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.பிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரமதர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட... மேலும் பார்க்க