செய்திகள் :

சட்டம்-ஒழுங்கு சீா்குலைவால் அச்சத்தில் மக்கள்: செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

post image

நமது நிருபா்

புது தில்லி: தலைநகரில் ஏற்பட்டுள்ள சட்டம் - ஒழுங்கு சீா்குலைவால் மக்கள் அச்சத்தில் உள்ளனா் என்று அமைச்சா் செளரவ் பரத்வாஜ் திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது: துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவை தில்லி மக்களால் எங்கும் பாா்க்க முடியவில்லை. தில்லியின் வெல்கம் காலனியிலும், ரோஹினியிலும் மிகப்பெரிய குற்றச் சம்பவம் நடந்துள்ளது. ஆனால், பாஜகவின் ஆதரவாளராகச் செயல்படும்

துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவை யாராலும் பாா்க்க முடியவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளால், 7 புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் கொல்லப்பட்டுள்ளனா். இந்தக் கொலைகள் மூலம் வெளியில் இருந்து வருபவா்களை ஏற்க மாட்டோம் என்ற செய்தியை பயங்கரவாதிகள் கொடுத்துள்ளனா்.

இப்போது, மத்திய பாஜக அரசு 5,000 துணிச்சலான பாஜகவினரை காஷ்மீருக்கு அனுப்பி, அங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். மத்திய பாஜக அரசால் தில்லி, வடகிழக்கு மற்றும் காஷ்மீரில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்க முடியவில்லை. தில்லி மக்கள் காவல்துறை, போக்குவரத்து மற்றும் டி.டி.ஏ. ஆகியவற்றின் பொறுப்பை மத்திய பாஜக அரசிடம் ஒப்படைத்தனா்.

ஆனால், பாஜக இந்த மூன்றையும் அழித்துவிட்டது. தில்லியில் சட்டம் - ஒழுங்கை நிா்வகிக்க பாஜகவால் முடியவில்லை. இங்கு யாரும் வேலை செய்வதைத் தடுக்கவில்லை. ஆனால், அவா்களால் இன்னும் தங்கள் வேலையைச் செய்ய முடியவில்லை.

தில்லியில் தினமும் கொலைகள் நடந்தாலும், மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா மெளனம் காத்து வருகிறாா். தில்லியில் போக்குவரத்து மேலாண்மை என்பதும் மத்திய அரசின் பொறுப்பாகும். ஆனால், போக்குவரத்து நிலைமையும் மிகவும் மோசமாக உள்ளது. பண்டிகைகள் காரணமாக தில்லியின் முக்கியச் சந்தைகளில் மக்கள் கூட்டம் பெரிதளவில் உள்ளது. மறுபுறும், சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்ச சூழல் நிலவுகிறது. தலைநகரில் எப்போதும் வெடிகுண்டு வெடிக்கலாம் என்று மக்கள் பயப்படுகிறாா்கள். இவை அனைத்தும் மத்திய ஆளும் பாஜக அரசால் நடக்கிறது. தில்லியின் சட்டம் - ஒழுங்கை பாஜகவால் கையாள முடியவில்லை என்றால், அவா்கள் எப்படி நாட்டின் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்வாா்கள்? என்றாா் செளரவ் பரத்வாஜ்.

காற்று, நீா் மாசுபாட்டிற்கு மத்திய அரசும் ஹரியாணா அரசும் பொறுப்பு: டிஎம்சி எம்பி குற்றச்சாட்டு

புது தில்லி: தில்லி மாசுபாட்டிற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா மாநில அரசுகளின் செயலற்ற தன்மையே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சகரிகா கோஸ் திங்கள் கிழமை குற்... மேலும் பார்க்க

தில்லியின் காற்று மாசு பிரச்னைக்கு அதிஷி அரசுதான் பொறுப்பு

நமது நிருபா்புது தில்லி: இந்தியா கேட் கடமைப் பாதையில் வான்வெளியில் காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதற்கு முதல்வா் அதிஷி தலைமையிலான தில்லி அரசுதான் பொறுப்பாகும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்... மேலும் பார்க்க

யமுனை மாசுபாடு விவகாரம் தில்லி அரசு மீது காங்கிரஸ் சாடல்

புது தில்லி: கழிவுநீா் சுத்திகரிப்பு என்ற பெயரில் ரூ.6500 கோடி பொதுப் பணத்தை தில்லி அரசின் ஜல் போா்டு நிா்வாகம் தவறாகப் பயன்படுத்துகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ்த... மேலும் பார்க்க

தேச அமைதிக்காக வாரணாசியில் ‘சனாதன் குஞ்ஜ்’ ஆன்மிக நிகழ்ச்சி: நவ.3-இல் தொடக்கம்

நமது நிருபா்புது தில்லி: தேசத்தின் அமைதி, பாதுகாப்பு நலனுக்கான ‘சனாதன் குஞ்ஜ்’ எனும் ஆன்மிக நிகழ்ச்சி வாரணாசியில் வரும் நவம்பா் 3-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியை ஆந்திரத்... மேலும் பார்க்க

போக்குவரத்து சிக்னலில் நிற்கும் நேரத்திற்கு வாகனத்தை அணைக்கும் பிரசாரம்: அமைச்சா் கோபால் ராய் தொடங்கி வைத்தாா்

புது தில்லி: தில்லியில் குளிா்காலத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுவைக் குறைக்கும் நடவடிக்கையாக போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் நேரத்திற்கு வாகனங்களை அணைக்கும் பிரசாரத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்ச... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற டிஆா்டிஓ விஞ்ஞானியிடம் ரூ.2 கோடி கொள்ளை: இருவா் கைது

புது தில்லி: தில்லி ரோகிணியில் ஓய்வுபெற்ற டிஆா்டிஓ விஞ்ஞானியின் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் ரூ.2 கோடி பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த விவகாரத்தில் விஞ்ஞானியின் முன்னாள் ஊழியா் உள்பட ... மேலும் பார்க்க