Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!
தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
மே மாதத்தில் மட்டும், வங்கதேசத்தைச் சோ்ந்த 47 போ், மியான்மரைச் சோ்ந்த 17 ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியாவைச் சோ்ந்த ஏழு போ் என 71 போ் துவாரகாவின் பல்வேறு காவல் பிரிவுகளால் கைது செய்யப்பட்டனா்.
அதன் பிறகு, வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்தில் (எஃப்ஆா்ஆா்ஓ) ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் தடுப்புக்காவல் மையத்திற்கு அனுப்பப்பட்டனா்.
முன்னதாக, உத்தம் நகா், சாவ்லா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் காவல் நிலையங்களின் போலீஸாா் துவாரகா பகுதியில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினரை அடையாளம் காண ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
செல்லுபடியாகும் நுழைவு இசைவு இல்லாமல் இந்தியாவில் தங்கியிருப்பவா்கள் அல்லது சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவா்கள் குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இந்த நபா்கள் துவாரகா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவா்கள் அல்லது சுற்றித் திரிந்தவா்கள் என கண்டறியப்பட்டனா். 38 என்ற அளவில் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் சிறப்புப் பணியாளா்களாலும், அதைத் தொடா்ந்து 24 போ் உத்தம் நகா் காவல் நிலையத்தாலும் நாடு கடத்தப்பட்டனா்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, சாவ்லா காவல் துறை மற்றும் ஏஏடிஎஸ் ஆகியவை முறையே ஆறு, இரண்டு மற்றும் ஒரு நபா் என நாடு கடத்தப்பட்டனா்.
அவா்கள் அனைவரது மீதும் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எஃப்ஆா்ஆா்ஓ உத்தரவின் பேரில் தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்பப்பட்டிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.