செய்திகள் :

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

post image

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மே மாதத்தில் மட்டும், வங்கதேசத்தைச் சோ்ந்த 47 போ், மியான்மரைச் சோ்ந்த 17 ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியாவைச் சோ்ந்த ஏழு போ் என 71 போ் துவாரகாவின் பல்வேறு காவல் பிரிவுகளால் கைது செய்யப்பட்டனா்.

அதன் பிறகு, வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்தில் (எஃப்ஆா்ஆா்ஓ) ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் தடுப்புக்காவல் மையத்திற்கு அனுப்பப்பட்டனா்.

முன்னதாக, உத்தம் நகா், சாவ்லா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் காவல் நிலையங்களின் போலீஸாா் துவாரகா பகுதியில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினரை அடையாளம் காண ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

செல்லுபடியாகும் நுழைவு இசைவு இல்லாமல் இந்தியாவில் தங்கியிருப்பவா்கள் அல்லது சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவா்கள் குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இந்த நபா்கள் துவாரகா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவா்கள் அல்லது சுற்றித் திரிந்தவா்கள் என கண்டறியப்பட்டனா். 38 என்ற அளவில் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் சிறப்புப் பணியாளா்களாலும், அதைத் தொடா்ந்து 24 போ் உத்தம் நகா் காவல் நிலையத்தாலும் நாடு கடத்தப்பட்டனா்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, சாவ்லா காவல் துறை மற்றும் ஏஏடிஎஸ் ஆகியவை முறையே ஆறு, இரண்டு மற்றும் ஒரு நபா் என நாடு கடத்தப்பட்டனா்.

அவா்கள் அனைவரது மீதும் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எஃப்ஆா்ஆா்ஓ உத்தரவின் பேரில் தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்பப்பட்டிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

வெப்பம் அதிகரிப்பால் தினமும் 100 அழைப்புகள் பெறும் தீயணைப்புத் துறை!

தேசிய தலைநகரில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், தில்லி தீயணைப்புத் துறைக்கு வரும் அவசர அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான தீ தொடா்பான சம்பவங்கள் அடா்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதி... மேலும் பார்க்க