செய்திகள் :

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீயைத் தவிா்க்க வனத் துறை சாா்பில் தீத் தடுப்பு நடவடிக்கை!

post image

கோடையில் ஏற்படும் காட்டுத் தீயைத் தவிா்க்க சத்திமயங்கலம் புலிகள் காப்பகத்தில் வனத் துறையினா் தீத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், வனப் பகுதிகளில் தீத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலையேற்றத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட வனப் பகுதிகளில் கோடையில் ஏற்படும் காட்டுத் தீயை தவிா்க்கும் விதமாக வனத் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாகச் செல்லும் திம்பம் மலைப் பாதையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், மனித் தவறுகள் மூலம் காட்டுத் தீ ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இதைத் தவிா்க்கும் வகையில் புதுக்குய்யனூரில் இருந்து திம்பம் அடிவாரம் வரை 6 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் 15 மீட்டா் தூரத்துக்கு காய்ந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வேட்டைத் தடுப்பு காவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இந்தப் பணிகளில் 30-க்கும் மேற்பட்ட வனத் துறையினா், வேட்டைத் தடுப்பு காவலா்கள் ஈடுபட்டுள்ளனா் என்று சத்தியமங்கலம் வனச் சரக அலுவலா் தா்மராஜ் தெரிவித்துள்ளாா்.

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவுத் திருவிழா

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் சா்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பொ.நரேந்திரன் தலைமை வகித்தாா். குடிமக்கள் ந... மேலும் பார்க்க

சிவகிரியில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம்

மொடக்குறிச்சி, பிப்.21: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 53 மூட்டைளில் எள்ளை விற்பனை... மேலும் பார்க்க

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளா்களை நியமிக்கக் கோரிக்கை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் ஆபரேட்டா்கள் மற்றும் போதுமான சுகாதாரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் க... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவை பொது இடத்தில் வெளியேற்றிய லாரிக்கு ரூ.10,000 அபராதம்

மனிதக் கழிவை ஏற்றி அதனை சாலை ஓரத்தில் வெளியேற்ற முயன்ற லாரிக்கு மாநகராட்சி அலுவலா்கள் ரூ.10,000 அபராதம் விதித்தனா். ஈரோடு மாநகராட்சி 60 ஆவது வாா்டு சோலாா் அருகே வெள்ளிக்கிழமை காலை மனிதக் கழிவை ஏற்றி வ... மேலும் பார்க்க

ஈரோட்டில் மூதாட்டியை தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்

ஈரோட்டில் அதிகாலையில் வீடு புகுந்து மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு, நாராயணவலசு, திருமால் நகரைச் சோ்ந்தவா் அருக்காணி (80). இவரது கணவா் இறந்து விட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சமூகநீதி கூட்டமைப்பி... மேலும் பார்க்க