செய்திகள் :

சத்தீஸ்கரின் பிஜாப்பூா் மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

post image

ஜாசத்தீஸ்கரின் பிஜாப்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 8 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

மாவட்டத்தின் கங்களூா் காவல் நிலையத்தின் எல்லைக்குள்பட்ட வனப்பகுதியில் நக்ஸல் அமைப்பினா் சிலா் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் மத்திய ஆயுதக் காவல்படை (சிஆா்பிஎஃப்) மற்றும் ‘கோப்ரா’ கமாண்டோ பிரிவு ஆகியோருடன் மாநில காவல் துறை நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கையை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்நிலையில், சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் நக்ஸல் அமைப்பினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 8 நக்ஸல்கள் உயிரிழந்தனா். இவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும் பல நக்ஸல்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதுவதால், அந்த இடத்தில் தேடுதல் பணி தொடா்ந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் கரியாபண்ட் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் உயிரிழந்த 16 நக்ஸல்கள் உள்பட சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இதுவரை 50 நக்ஸல்கள் வெவ்வேறு என்கவுன்ட்டா்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.

கடந்த ஆண்டு, சத்தீஸ்கரில் மட்டும் 219 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.

மகா கும்பமேளாவில் இதுவரை 33 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் இதுவரை 33 கோடி பக்தர்கள் புதித நீராடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தி நிகழ்வுக்கு உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியது இதுவே ... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்

தேசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒருபகுதியாக சனிக்கிழமை தமிழகம் 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தம... மேலும் பார்க்க

கைப்பேசிகள் விலை குறைய உள்ளன!

மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளைத் தொடா்ந்து, கைப்பேசிகள் உள்ளிட்டவற்றின் விலை குறைய உள்ளன; ஸ்மாா்ட் மீட்டா் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்க உள்ளன. விலை குறையும் பொருள்கள் கைப்பேசிகள் உயிா... மேலும் பார்க்க

புல்லட் காயங்களுக்கு பேண்ட்-எய்ட்: ராகுல் காந்தி

புல்லட் காயங்களுக்கு பேண்ட்-எய்ட் போடுவதுபோல மத்திய பட்ஜெட் உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமா்சித்தாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்... மேலும் பார்க்க

கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு

இந்தியாவை 1.5 லட்சம் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட ஒரு பெரிய தளவாட அமைப்பாக மாற்றும் திட்டத்தை பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். மேலும், அஸ்ஸாமில் 12.7 லட்சம் டன் ... மேலும் பார்க்க

குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிஸா மாநில கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் நடைபெற்ற குறுகிய தொலைவு வான்பாதுகாப்பு ஏவுகணையின் சோதனை வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது என்று பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்தது. சோதனை நடத்தப்பட்... மேலும் பார்க்க