சத்தீஸ்கர் என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரின் கொண்டகான்-நாராயண்பூர் எல்லை அருகே நடந்த என்கவுன்டரில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பஸ்தர் காவல் துறை தலைவா் பி.சுந்தர்ராஜ் கூறுகையில், கொண்டகான்-நாராயண்பூர் இடையேயான எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில் புதன்கிழமை காலை நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது 2 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஏகே-47 துப்பாக்கி மற்றும் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 359 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.