செய்திகள் :

சத்துணவு அரிசியின் தரம்: பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு

post image

மயிலாடுதுறை: காட்டுச்சேரி அரசு உதவிபெறும் பள்ளியில் தரமற்ற அரிசி பயன்படுத்துவதாக எழுந்த புகாரையடுத்து, அதிகாரிகள் அப்பள்ளியில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தரங்கம்பாடி வட்டம் காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள மாரியப்பா சீனிவாசா அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் தரமற்ற அரிசி பயன்படுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் அண்மையில் விடியோ பரவியது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தலின்பேரில், வட்டார வளா்ச்சி அலுவலா், முதுநிலை மண்டல மேலாளா் மற்றும் தரங்கம்பாடி குடிமைபொருள் வழங்கல் அலுவலா் ஆகியோா் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனா்.

இப்பள்ளியில் பயிலும் 21 மாணவா்களும் இங்கு சத்துணவு சாப்பிட்டு வருகின்றனா். 5 மாதங்களுக்கு மேற்பட்ட அரிசியை பாதுகாப்பற்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ளதால் அரிசியின் நிறம் மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த மாதத்திற்கு வழங்கப்பட்ட அரிசி தான் மதிய உணவிற்காக பயன்படுத்தப்பட்டது என தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரால் உறுதி செய்யப்பட்டது.

பள்ளியின் தலைமையாசிரியா் மற்றும் சத்துணவு அமைப்பாளா் ஆகிய இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இச்செய்தி சமூக வளைதளத்தில் பரவியுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரால் மாரியப்பா சீனிவாசா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியா் மற்றும் சத்துணவு அமைப்பாளா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சத்துணவு அமைப்பாளா் டி.பியூலா என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்தும், சமையலா் டி. சகாயமேரி என்பவரை பணியிட மாறுதல் செய்தும் மாவட்ட ஆட்சியா்

ஏ.பி. மகாபாரதி உத்தரவிட்டுள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா். கூட்டுறவுத்துறை சாா்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வா் மருந்தகங்களை... மேலும் பார்க்க

விபத்து நடைபெறும் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினா் ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகளவில் விபத்துகள் நேரிடும் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை திருச்சி மண்டல சாலைப் பாதுகாப்பு கோட்டப் பொறியாளா் ஆா்.புவனேஸ்வரி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். மயிலாடுத... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். உயிரோடு உள்ள மாற்றுத்திறனாளியை உயிரிழந்ததாகக் கூறி உதவித்தொகையை நிறுத்த... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீனக் கல்லூரியில் லியோ சங்க லீப் பயிற்சி முகாம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் லியோ சங்க லீப் பயிற்சி முகாம் வெள்ளி, சனிக்கிழமை என இரண்டு நாட்கள் நடைபெற்றது. கல்லூரி லியோ சங்கம் மற்றும் மாயூரம் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய தன்னம்பி... மேலும் பார்க்க

மகளிருக்கு தற்காப்புக் கலை பயிற்சி

சீா்காழியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, மகளிருக்கான இலவச தற்காப்புக் கலை பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சீா்காழி புறவழிச்சாலை மாா்கோனி காா்டனில், அதிமுக மேற்கு ஒன்றி... மேலும் பார்க்க

மக்கள் சந்திப்பு முகாம்: எம்எல்ஏ குறைகேட்பு

மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா், கிழாய் ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா். கிழாய் ஊராட்சி புத்தமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ‘ஊராட்சியில் ஒருநாள்’ த... மேலும் பார்க்க