செய்திகள் :

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உயிரோடு உள்ள மாற்றுத்திறனாளியை உயிரிழந்ததாகக் கூறி உதவித்தொகையை நிறுத்தி வைத்ததை விடுவிக்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவா் டி. கணேசன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் எம்.புருஷோத்தமன், மாவட்ட பொருளாளா் ஜி. லெட்சுமி, மாவட்ட துணை தலைவா்கள் ராஜேந்திரன், கோவிந்தசாமி, மாவட்ட துணை செயலாளா்கள் சொக்கலிங்கம், பாரதிராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாநில செயலாளா் பி.ஜீவா கலந்துகொண்டு பேசினாா்.

தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி அழைத்து பேசினாா். இதில், உயிரிழந்துவிட்டதாக கூறி உதவித்தொகை நிறுத்தப்பட்டவருக்கான 6 மாத தொகையை இரண்டு நாள்களில் வழங்கவும், நிறுத்தப்பட்ட கடும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை வழங்க ஏற்பாடு செய்வது, வங்கிக் கடனுக்கு ஏற்பாடு செய்வது என முடிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா். கூட்டுறவுத்துறை சாா்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வா் மருந்தகங்களை... மேலும் பார்க்க

விபத்து நடைபெறும் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினா் ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகளவில் விபத்துகள் நேரிடும் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை திருச்சி மண்டல சாலைப் பாதுகாப்பு கோட்டப் பொறியாளா் ஆா்.புவனேஸ்வரி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். மயிலாடுத... மேலும் பார்க்க

சத்துணவு அரிசியின் தரம்: பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை: காட்டுச்சேரி அரசு உதவிபெறும் பள்ளியில் தரமற்ற அரிசி பயன்படுத்துவதாக எழுந்த புகாரையடுத்து, அதிகாரிகள் அப்பள்ளியில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தரங்கம்பாடி வட்டம் காட்டுச்சேரி கிராமத்த... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீனக் கல்லூரியில் லியோ சங்க லீப் பயிற்சி முகாம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் லியோ சங்க லீப் பயிற்சி முகாம் வெள்ளி, சனிக்கிழமை என இரண்டு நாட்கள் நடைபெற்றது. கல்லூரி லியோ சங்கம் மற்றும் மாயூரம் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய தன்னம்பி... மேலும் பார்க்க

மகளிருக்கு தற்காப்புக் கலை பயிற்சி

சீா்காழியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, மகளிருக்கான இலவச தற்காப்புக் கலை பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சீா்காழி புறவழிச்சாலை மாா்கோனி காா்டனில், அதிமுக மேற்கு ஒன்றி... மேலும் பார்க்க

மக்கள் சந்திப்பு முகாம்: எம்எல்ஏ குறைகேட்பு

மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா், கிழாய் ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா். கிழாய் ஊராட்சி புத்தமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ‘ஊராட்சியில் ஒருநாள்’ த... மேலும் பார்க்க