செய்திகள் :

சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் பிறந்ததை ஏற்றுக் கொள்வோமா? சி.பி. ராதா கிருஷ்ணன் பேச்சு

post image

மத்திய அரசின் நிதியை மாநில அரசு போற்றுவதில்லை என்று மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதா கிருஷ்ணன் பேசுகையில், தீவிரவாதம் எதுவாக இருந்தாலும் சரி, எந்த உருவத்தில் வந்தாலும் சரி, அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

தமிழகத்துக்கு மத்திய அரசு நிறைய நிதி அளித்தாலும், அதனைப் போற்ற சிலருக்கு மனம் வரவில்லை. மத்திய அரசோடு மாநில அரசு இணைந்து செயல்படுவதுதான், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு உதவும். தமிழக ஆளுநர் மிகவும் நல்லவர். தன் கடமையைச் சரியாகச் செய்துவரும் அவருக்கு, மாநில அரசும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

டாஸ்மாக் பிரச்னை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனைக் காட்டிலும், கஞ்சா அதிகமாகப் பரவி வருகிறது. ஆகையால், கஞ்சாவை ஒழிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வதே தவறு. மத்திய அரசானது ஒன்றிய அரசு என்றால், மாநில அரசு என்ன பஞ்சாயத்து அரசா? நீங்கள் பிரிவினைவாதத்தை திணிக்கிறீர்கள். உங்கள் எண்ணம் தவறாக இருப்பதால்தான், இதுவரை இல்லாத மொழிப்பெயர்ப்பைக் கொண்டு வருகிறீர்கள்.

திமுகவை ஒழிப்பதுதான் தனது வேலை என்றுகூறி, தனது இயக்கத்தை கமல்ஹாசன் தொடங்கினார். ஆனால், இன்று திமுகவோடு இருப்பதுதான் தமிழகத்துக்கு நன்மை பயக்கும் என்று கூறுகிறார். பதவிக்காகவே அவர் அப்படி பேசுகிறார்.

சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் பிறந்தது என்று சொன்னால் யாராவது ஏற்றுக் கொள்வோமா? ஏற்றுக்கொள்ள மாட்டோம் அல்லவா.

அதுபோலத் தான், நாம் பேசும்போது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு இருப்பவர்கள்தான், பொது வாழ்க்கையில் இருப்பதற்கு தகுதியானவர்கள் என்று தெரிவித்தார்.

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உயர்மன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களி... மேலும் பார்க்க

செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உணவகங்களில் பின்பற்றக்கூடிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர... மேலும் பார்க்க

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்து வைத்தார்!

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நு... மேலும் பார்க்க

ஜூன் 8ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூன் 8 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய பண... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை: பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெறும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கிலோ மீட்டர் தொலை... மேலும் பார்க்க

தங்கை கனிமொழியைக் கண்டு பெருமைகொள்கிறேன்: மு.க. ஸ்டாலின்

இந்தியாவின் தேசிய மொழி குறித்து ஸ்பெயினில் கனிமொழி பேசியதற்கு பெருமைகொள்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவா... மேலும் பார்க்க