செய்திகள் :

`சமாதான தூது' - ட்ரம்பை சந்தித்த அதானி குழும அதிகாரிகள்; சோலார் ஒப்பந்த மோசடி வழக்கு ரத்து ஆகுமா?

post image

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 'அடுத்த 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் கிடைக்க உள்ள சோலார் ஒப்பந்தத்தைப் பெற அதானி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கினார் என்றும், இந்த ஒப்பந்தத்தைக் காட்டி அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் பெற்றார்' என்றும் அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி குழுமத்தின் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது.

ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் இருந்து மீண்டு வந்துகொண்டிருந்த அதானி குழுமத்தின் மீது, இந்த வழக்கு பெரும் இடியாக இறங்கியது. இதனால், அந்தக் குழுமத்தின் பங்குகள் அப்போது சரிந்தன.

இந்த வழக்கு இப்போதும் அமெரிக்காவில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அதானி குழுமம்
அதானி குழுமம்

இந்த நிலையில், இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்பை, அதானி குழுமத்தின் அதிகாரிகளின் குழு இந்த வழக்கு குறித்து சந்தித்துள்ளது. இந்த சந்திப்பு, இந்த சோலார் மோசடி வழக்கை ரத்து செய்வது குறித்தானது என்று கூறப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நடந்து வருகிறது. ஆனால், இப்போது தான் அது ஓரளவு அதானிக்கு சாதகமான நிலையில் செல்கிறது.

அதானி குழுமம் முன்வைக்கும் வாதம் என்ன?

இந்தக் குற்றச்சாட்டு ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிராக உள்ளது என்றும், அதனால், இந்த வழக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ட்ரம்பிடம் நடத்தும் பேச்சுவார்த்தையில் அதானி குழும அதிகாரிகள் தங்களது வாதத்தை முன்வைத்துள்ளனர்.

இந்த வாதம் கைகொடுக்குமா? அதானி குழுமத்தின் மீது இருக்கும் வழக்கு ரத்து செய்யப்படுமா? இனி வரும் அடுத்தடுத்த நகர்வுகளில் தெரிந்துகொள்ளலாம்.

NEET: ``மூக்குத்தி, தோடில் பிட் எடுத்துச் செல்ல முடியுமா? தமிழ்நாட்டுக்கு ஏன் இந்த கொடுமை'' - சீமான்

செய்தியாளர்களை இன்று சந்தித்த சீமான் நீட் தேர்வு கட்பாடு குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார்.நீட் தேர்வு குறித்து குறித்து பேசிய அவர், “ நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் பெறப்பட்ட கையெழுத்துகள் ... மேலும் பார்க்க

எம்எல்ஏ ரவி கைது: ``இந்த பூச்சாண்டிகளுக்கு அதிமுகவினர் பயப்படுபவர்கள் அல்ல..'' - இபிஎஸ் கண்டனம்

அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ ரவி கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.இதுத்தொடர்பாக பேசியிருக்கும் அவர், “அரக்கோணம் MRF அண்ணா தொழிற்சங்கம் சார்பில் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்... மேலும் பார்க்க

NEET exam: `பூணூல் கூடாது' மாணவனுக்கு நடந்த சம்பவம்; கர்நாடகாவில் வெடித்த போராட்டம்..

இந்தியா முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது.மாணவிகளின் ஆடைகளில் இருந்த பொத்தான்களை அகற்றியதாகவும், மூக்குத்தி, தாலி போன்றவற்றை கழற்றச் சொன்னதாகவும் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், கர்நாடக... மேலும் பார்க்க

Doctor Vikatan: பாதாமை எப்படிச் சாப்பிடணும்? ஊறவைத்து தோலுரித்தது, வறுத்தது, பச்சையாக.. எது சரி?

Doctor Vikatan:பாதாம் பருப்பு உள்ளிட்ட நட்ஸ் வகைகளை எப்படிச் சாப்பிட வேண்டும்... பாதாமை ஊறவைத்து தோல் நீக்கிதான் சாப்பிட வேண்டுமா... இது எல்லா நட்ஸுக்கும் பொருந்துமா... பேலியோ டயட்டில் 100 பாதாம் எல்ல... மேலும் பார்க்க

``அவரது மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது..'' - பத்மஸ்ரீ பாபா சிவானந்த் மறைவுக்கு மோடி இரங்கல்

பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா குரு பாபா சிவானந்த் உடல்நலக் குறைவால் வாரணாசியில் நேற்று (மே 3) இரவு காலமானார். 128 வயதான பாபா சிவானந்துக்கு, ஏப்ரல் 30 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இத... மேலும் பார்க்க

Neet: ஆடையில் நிறைய பட்டன் இருந்ததால் தேர்வு எழுத மறுப்பு.. உடனே பெண் போலீஸ் செய்த நெகிழ்ச்சி செயல்!

2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு ஒரே கட்டமாக இன்று (மே 4) நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். நாடு முழுவதும் 23 லட்சம் மாண... மேலும் பார்க்க