செய்திகள் :

'செங்கோட்டையை மட்டும் ஏன் கேக்குறீங்க, கூடவே...' - சொந்தம் கொண்டாடிய பெண்; காட்டமான உச்ச நீதிமன்றம்!

post image

உச்ச நீதிமன்றத்தில் சுல்தானா பேகம் என்ற பெண் வித்தியாசமான மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதில் முகலாயர்களின் கடைசி மன்னனான பகதூர் ஷாவின் பேரன்வழி பேரனின் மனைவி தான் என்றும் கணவனை இழந்தவர் என்றும் கூறியிருந்தார்.

செங்கோட்டை
செங்கோட்டை

முகலாயர்களுக்கு சொந்தமான சொத்துகளை கிழக்கிந்திய கம்பெனி சேர்ந்தவர்கள் பிடித்து வைத்திருந்ததாகவும், நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு அவற்றை இந்திய அரசாங்கம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும், அதன்படி டெல்லியில் உள்ள செங்கோட்டை சட்ட விரோதமாக இந்திய அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எனவே உடனடியாக அதனை தன் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இவ்வளவு நாள் சட்டவிரோதமாக செங்கோட்டையை ஆக்கிரமித்து இருந்ததற்காக இந்திய அரசாங்கம் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா , "ஏன் டெல்லி செங்கோட்டையை மட்டும் கேட்கிறீர்கள். பதேபூர் சிக்கிரி கோட்டையையும் சேர்த்து கேட்க வேண்டியதுதானே. என்ன மாதிரியான வழக்கு இதெல்லாம்" எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஏற்கனவே இதே வழக்கை கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரு நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்திருந்தது.

சஞ்சீவ் கண்ணா
சஞ்சீவ் கண்ணா

இதற்கு எதிராகத்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். தற்போது அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

டெல்லி உயர் நீதிமன்றம் தாமதமாக வழக்கைத் தாக்கல் செய்ததால் தான் தனது மனுவை தள்ளுபடி செய்ததாகவும் எனவே உச்ச நீதிமன்றம் மெரிட் அடிப்படையில் தனது வழக்கை விசாரிக்க வேண்டும் என செங்கோட்டையை உரிமை கூறிய சுல்தானா பேகம், தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

கரூர்: `எச்சில் இலையில் உருளும் நெரூர் மட சடங்குக்குத் தடை...' - உச்ச நீதிமன்றம் உத்தரவு

கரூர் மாவட்டம், நெரூர் கிராமத்தில் சதாசிவ பிரம்மேந்திரர் என்ற சாமியாரின் சமாதியில், அவரது நினைவு நாளில் பக்தர்கள் எச்சில் இலையில் உருளும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.மனித நேயத்திற்கு எதிரானது ம... மேலும் பார்க்க

விவாகரத்து: பெண்ணுக்கு 'தங்க நகைகள்' திருப்பிக்கொடுக்கப்பட வேண்டுமா? - நீதிமன்ற உத்தரவு என்ன?

திருமணத்தின் போது மணப்பெண்ணுக்குக் கொடுக்கப்படும் நகைகளும் பணமும் (சீதனம்) பெண்ணின் தனிப்பட்ட சொத்து என உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது கேரள உயர் நீதிமன்றம்.எர்ணாகுளம் மாவட்டம், கலமசேரியைச் சேர்ந்த பெ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு மே13-ம் தேதி தீர்ப்பு... நீதிபதி மாற்றமும், விளக்கமும்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வழக்கு நாட்டையே அதிரவைத்தது. பொள்ளாச்சிபாலியல்வன்கொடுமை விவகாரம் அம்பலமாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. “அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்க” எனக் ... மேலும் பார்க்க

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு : குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

கடலூர் மாவட்டம் குப்பநத்தம் புது காலனி பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த சாமி கண்ணு எனும் நபருடைய மகனான முருகேசன் இளங்கலைப் படிப்பு படித்து வந்துள்ளார்.உச்ச நீதிமன்றம் அதே பகுதியில் உள்ள இடை... மேலும் பார்க்க

Bombay High Court: `நாய் மாஃபியா' - நீதி மன்றத்தை அவமதித்த பெண்; 20,000 அபராதம் விதித்து நடவடிக்கை

கடந்த ஜனவரி மாதம், மும்பையில் தெருநாய்களுக்கு உணவளிப்பதனால், தான் வசிக்கும் குடியிருப்பின் நிர்வாகக் குழு தனக்கு துன்பம் ஏற்படுத்துவதாக லீலா வர்மா என்ற பெண்மணி உயர் நீதிமன்றத்தில் குடியிருப்பு சங்கத்த... மேலும் பார்க்க

சாவர்க்கர் குறித்த கருத்து : `இது எதாவது ராகுல் காந்திக்கு தெரியுமா?’ - காட்டமான உச்ச நீதிமன்றம்

கடந்த 2022 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடத்தப்பட்ட ஒற்றுமையை யாத்திரையில் பேசிய ராகுல் காந்தி, `சாவர்க்கர் பிரிட்டிஷார் உடன் இணைந்து செயல்பட்டார்’ என்றும் `பிரிட்டிஷார் ... மேலும் பார்க்க