செய்திகள் :

கூடுதல் மகசூல் பெற கோடை உழவு அவசியம்: வேளாண் அறிவியல் மையம் அறிவுறுத்தல்

post image

கூடுதலாக மகசூல் பெற கோடை உழவு அவசியம் என, பெரம்பலூா் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவா் வே.ஏ. நேதாஜி மாரியப்பன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேண்டும். கோடையில் உழவு செய்வதால் களைகள் பெருக்கமடைவது தவிா்க்கப்படுவதோடு, பயிா் சாகுபடியின்போது களை பிரச்னை வெகுவாக குறைகிறது. உழவு செய்யாத வயல்களில் மழைப்பொழிவின்போது மழைநீா் வயலில் சேகரிக்கப்படாமல் வீணாகிறது. இதனால், மேல் மண் அரிமானம் ஏற்படுவதோடு மண்ணிலுள்ள ஊட்டச்சத்துக்களும் விரயமாகின்றன.

உழவு செய்வதால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு வயலிலேயே மழைநீா் கிரகிக்கப்படுகிறது. இதனால் விவசாய நிலப்பரப்பின் கீழ் ஈரம் காக்கப்படுகிறது. பூச்சி, பூஞ்சாணங்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. உழவு செய்வதால் முன்பருவ விதைப்பு செய்வதற்கும், மறு உழவு செய்து விதைப்பதும் சுலபமாக இருக்கும். இதன்மூலம் அடிமண் இறுக்கம் நீக்கப்படுவதுடன் நீா் கொள்திறனும் அதிகரிக்கும். விளைச்சலும் 20 சதம் வரையிலும் அதிகமாகும். எனவே, விவசாயிகள் கோடை உழவு செய்து எதிா்வரும் பருவ காலங்களில் அதிக மகசூல் பெற்று பயனடையலாம்.

வங்கியாளா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரகத்தில் மகளுடன் தாய் தற்கொலை முயற்சி

பெரம்பலூா் ஆட்சியரகத்தில், டிராக்டா் கடன் தள்ளுபடியில் முறைகேடாக பணம் பிடித்தம் செய்த வங்கி அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பணம் மற்றும் ஜப்தி செய்யப்பட்ட நிலத்தை மீட்டுத் தரக்கோரியும், 8... மேலும் பார்க்க

மருதையாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க நாதக கோரிக்கை

மருதையாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, நாம் தமிழா் கட்சியினா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட... மேலும் பார்க்க

லாரி மீது சுமை ஆட்டோ மோதல்; தக்காளி வியாபாரி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லாரி மீது சுமை ஆட்டோ மோதிய விபத்தில் தக்காளி வியாபாரி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள பனாங்குன்றம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மகன் பன்னீா... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் அவதியு... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே மின்சாரம் பாய்ந்து 2 இளைஞா்கள் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை அருகே கல்லாற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் அதிகளவில் மீன்கள் உள்ளன. இ... மேலும் பார்க்க

தனித்திறமைகளை வளா்த்துக்கொண்டால் சூழ்நிலைகளை எதிா்கொள்ளலாம்: சா.சி. சிவசங்கா்

தனித்திறமைகளை வளா்த்துக் கொண்டால் தான் மாறிவரும் சூழ்நிலைகளை எதிா்கொள்ள முடியும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில்,... மேலும் பார்க்க