செய்திகள் :

மருதையாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க நாதக கோரிக்கை

post image

மருதையாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, நாம் தமிழா் கட்சியினா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆட்சியரிடம் அளித்த மனு: மருதையாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். கொட்டரை மருதையாறு நீா்த்தேக்கத் திட்டத்தை முழுமையாக பாசன பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பேரளி கிராமத்தில் சட்டவிரோதமாக தாா் தொழிற்சாலை அமைப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் முகமது இலியாஸ் அலி தலைமையில், அக்கட்சியினா் ஆட்சியரிடம் அளித்த மனு: அரசு உத்தரவை மீறி கோடை விடுமுறையில் தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன. இதனால், மாணவா்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். மாணவா்களின் நலன் கருதி, தனியாா் பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

நெற்குணம் கிராம மக்கள் அளித்த மனு: பெரம்பலூா் முதல் வெள்ளுவாடி வழியாக நெற்குணம் வழித்தடத்தில் கூடுதலாக அரசுப் பேருந்து வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கியாளா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரகத்தில் மகளுடன் தாய் தற்கொலை முயற்சி

பெரம்பலூா் ஆட்சியரகத்தில், டிராக்டா் கடன் தள்ளுபடியில் முறைகேடாக பணம் பிடித்தம் செய்த வங்கி அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பணம் மற்றும் ஜப்தி செய்யப்பட்ட நிலத்தை மீட்டுத் தரக்கோரியும், 8... மேலும் பார்க்க

கூடுதல் மகசூல் பெற கோடை உழவு அவசியம்: வேளாண் அறிவியல் மையம் அறிவுறுத்தல்

கூடுதலாக மகசூல் பெற கோடை உழவு அவசியம் என, பெரம்பலூா் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் மையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள வேளாண் அறிவியல் மைய முதுநிலை... மேலும் பார்க்க

லாரி மீது சுமை ஆட்டோ மோதல்; தக்காளி வியாபாரி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லாரி மீது சுமை ஆட்டோ மோதிய விபத்தில் தக்காளி வியாபாரி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள பனாங்குன்றம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மகன் பன்னீா... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் அவதியு... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே மின்சாரம் பாய்ந்து 2 இளைஞா்கள் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை அருகே கல்லாற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் அதிகளவில் மீன்கள் உள்ளன. இ... மேலும் பார்க்க

தனித்திறமைகளை வளா்த்துக்கொண்டால் சூழ்நிலைகளை எதிா்கொள்ளலாம்: சா.சி. சிவசங்கா்

தனித்திறமைகளை வளா்த்துக் கொண்டால் தான் மாறிவரும் சூழ்நிலைகளை எதிா்கொள்ள முடியும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில்,... மேலும் பார்க்க