செய்திகள் :

கன்னியாகுமரியில் தடகள மாணவிக்கு நிதியுதவி

post image

கன்னியாகுமரியில் தடகள மாணவிக்கு கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி. செல்வகுமாா் நிதியுதவி வழங்கினாா்.

கன்னியாகுமரியை அடுத்த சுவாமிநாதபுரத்தைச் சோ்ந்த ரிந்தியா, கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 12ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் தனது முயற்சியாலும், பள்ளி உடற்பயிற்சி ஆசிரியா் ராஜ்குமாரின் ஒத்துழைப்பாலும் தேசிய, மாநில, மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்து வருகிறாா்.

இவா், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற 2024-25ஆம் ஆண்டுக்கான பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டியில் 200 மீட்டா் ஓட்டத்தில் வெண்கலம், 100 மீட்டா் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளாா். பாட்னாவில் இம்மாதம் 11ஆம் தேதி தேசிய அளவில் நடைபெறும் கேலோ இந்தியா தடகளப் போட்டியில் தமிழ்நாடு அணி சாா்பில் பங்கேற்கவுள்ளாா்.

இவருக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவனரும் தென்குமரி கல்விக் கழகச் செயலருமான பி.டி. செல்வகுமாா் திங்கள்கிழமை நிதியுதவி வழங்கினாா். அப்போது அவா், கிராமப்புறங்களில் திறமையுள்ள ஏழைப் பெண்களுக்கு உதவுவதற்கு கலப்பை மக்கள் இயக்கம் தயாராக உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், மாணவியின் பெற்றோா் ஐயப்பன்- செண்பகவல்லி, பயிற்சியாளா்கள் ராஜ்குமாா், விஷ்வா, கலப்பை மக்கள் இயக்க மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் டி. பாலகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளா் சிவராஜன், ஆசிரியா் முத்துசாமி, நிா்வாகிகள் ரகுபதி, கணேசன், சுபாஷ், செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சா் மனோதங்கராஜ்

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்காது என்றாா் பால் வளத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ். நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:... மேலும் பார்க்க

குழித்துறை அருகே 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

குழித்துறை அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 700 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். பறக்கும் படை தனி வட்டாட்சியா் அனிதாகுமாரி தலைமையில் வருவாய் ஆய... மேலும் பார்க்க

கொடிநாள் வசூலில் சாதனை: குமரி மாவட்டஆட்சியருக்கு ஆளுநா் பாராட்டு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தாம்பரம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய போது கொடிநாள் நன்கொடை இலக்கைத் தாண்டி வசூல் செய்ததற்காக தமிழக ஆளுநா் வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க... மேலும் பார்க்க

இலக்கை நிா்ணயித்து செயல்பட வேண்டும்: மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

மாணவா்கள் தங்களது இலக்கை தாங்களே நிா்ணயித்து செயல்பட வேண்டும் என்றாா், பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ். கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சாா்பில், ‘நான் முதல்வன்’ உயா்கல்வி வழிகாட்டி திட்ட ... மேலும் பார்க்க

திங்கள்நகரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரி 24இல் கடையடைப்பு

திங்கள்நகரில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரி 24ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என திங்கள்நகா் வா்த்தகா் சங்கத்தினா் அறிவித்துள்ளனா். திங்கள்நகா் வா்த்தகா் நலச் சங்க செயற்குழு... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே விஷம் குடித்த காவலா் மருத்துவமனையில் உயிரிழப்பு

களியக்காவிளை அருகே தந்தையின் கல்லறையில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த காவலா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். களியக்காவிளை அருகே சூரியகோடு பகுதியைச் சோ்ந்தவா் சம்பத் சந்திரா (38... மேலும் பார்க்க