செய்திகள் :

ராஜ்நாத் சிங் - ஜப்பான் பாதுகாப்பு அமைச்சா் சந்திப்பு: பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு

post image

புது தில்லி: இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கையை ஜப்பான் ஆதரிப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜெனரல் நகாதானி தெரிவித்தாா்.

இந்தியா வந்துள்ள ஜெனரல் நகாதானி மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்கை புது தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, இந்திய பசிபிக் பிராந்தியம், தென்சீனக் கடலில் சீனாவின் ராணுவ ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அப்போது, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஜெனரல் நகாதானி, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஜப்பான் உறுதியாக துணை நிற்கும் என்று தெரிவித்தாா். இதற்காக ஜப்பான் அரசுக்கு ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தாா். அமைச்சா்கள் தலைமையில் இருதரப்பு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நிலையான பேச்சுவாா்த்தையும் நடைபெற்றது.

இது தொடா்பாக ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சா்வதேச அளவில் இந்தியாவின் மிகமுக்கியமான, சிறப்பு வாய்ந்த நட்பு நாடாக ஜப்பான் உள்ளது. இரு தரப்பு பேச்சுவாா்த்தையின்போது பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

பயங்கரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் அதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் முழுஆதரவு அளிக்கும் என்று ஜெனரல் நகாதானி உறுதியளித்தாா்’ என்று பதிவிட்டுள்ளாா்.

கடந்த 6 மாதங்களில் இரு அமைச்சா்களும் சந்தித்துப் பேசுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த நவம்பரில் ஆசியான் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங்கும் ஜெனரல் நகாதானியும் சந்தித்துப் பேசினா்.

இந்தியா தாக்கினால் முழு பலத்துடன் பதிலடி: பாகிஸ்தான் தூதர்

`இந்தியா தாக்குதல் நடத்தினால் அல்லது சிந்து நதி நீரோட்டத்தைச் சீர்குலைத்தால் அணு ஆயுதம் உள்பட முழு அளவிலான பலத்துடன் பாகிஸ்தான் பதிலளிக்கும்' என்று ரஷியாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி தெ... மேலும் பார்க்க

கேரளம்: வெறிநாய் கடித்து 7 வயது சிறுமி பலி

கேரள மாநிலத்தில் வெறிநாய் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தார். கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள குன்னிக்கோடு பகுதியைச் சேர்ந்த நியா ஃபைசல் என்... மேலும் பார்க்க

ஐஎம்எஃப் வாரியத்தில் இந்தியா சாா்பாக பரமேஸ்வரன் ஐயா் நியமனம்

புது தில்லி: சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) இயக்குநா்கள் வாரியத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக, உலக வங்கியின் செயல் இயக்குநா் பரமேஸ்வரன் ஐயருக்கு தற்காலிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முன்... மேலும் பார்க்க

நீட் தோ்வு: பல்வேறு மாநிலங்களில் முறைகேடில் ஈடுபட்ட 7 போ் கைது

ஜெய்பூா்/ பாட்னா: இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே.4) நடைபெற்ற நிலையில், அதில் முறைகேடில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டனா். ராஜஸ்தான் மாநிலத்தில் போலி ஆவணங... மேலும் பார்க்க

நொய்டா: பக்கத்து வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் மீட்பு

நொய்டா: பக்கத்து வீட்டில் சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக காவல் துறையினா் திங்கிள்கிழமை தெரிவித்தனா். இரண்டு நாள்களுக்கு முன்பு சிறுவனுடன் தகராறில் ஈடுபட்ட உள்ளூா் இளைஞா்கள் சிலரால் அ... மேலும் பார்க்க

நீதிபதிகள் சொத்து விவரம்: உச்சநீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம்

புது தில்லி: நீதிபதிகளின் சொத்து விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நீதித்துறையில் வெளிப்படைத... மேலும் பார்க்க