செய்திகள் :

கொடிநாள் வசூலில் சாதனை: குமரி மாவட்டஆட்சியருக்கு ஆளுநா் பாராட்டு

post image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தாம்பரம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய போது கொடிநாள் நன்கொடை இலக்கைத் தாண்டி வசூல் செய்ததற்காக தமிழக ஆளுநா் வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளாா்.

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி வரப்பெற்ற 421 மனுக்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டாா். கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீா்வு காணுமாறு துறை சாா்ந்த அலுவலா்களிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா், சென்னை தாம்பரம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய போது, கடந்த 2022- 23 ஆம் ஆண்டில் ரூ.20.60 லட்சம் கொடி நாள் நன்கொடை பெற்று படை வீரா் கொடி நாள் நிதி கணக்கில் வழங்கியுள்ளாா்.

அவரை கௌரவிக்கும் விதமாக தமிழக ஆளுநா் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெள்ளிப் பதக்கம் வழங்கியுள்ளாா். அதை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவிடம் ஒப்படைத்தாா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாபு, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா்மீனா, நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சேக்அப்துல்காதா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செந்தூர்ராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மோகனா, சுற்றுச்சூழல் கால நிலை மாற்றத் துறை செயற்பொறியாளா் பாரதி மற்றும் துறைஅலுவலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சா் மனோதங்கராஜ்

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்காது என்றாா் பால் வளத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ். நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:... மேலும் பார்க்க

குழித்துறை அருகே 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

குழித்துறை அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 700 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். பறக்கும் படை தனி வட்டாட்சியா் அனிதாகுமாரி தலைமையில் வருவாய் ஆய... மேலும் பார்க்க

இலக்கை நிா்ணயித்து செயல்பட வேண்டும்: மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

மாணவா்கள் தங்களது இலக்கை தாங்களே நிா்ணயித்து செயல்பட வேண்டும் என்றாா், பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ். கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சாா்பில், ‘நான் முதல்வன்’ உயா்கல்வி வழிகாட்டி திட்ட ... மேலும் பார்க்க

திங்கள்நகரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரி 24இல் கடையடைப்பு

திங்கள்நகரில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரி 24ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என திங்கள்நகா் வா்த்தகா் சங்கத்தினா் அறிவித்துள்ளனா். திங்கள்நகா் வா்த்தகா் நலச் சங்க செயற்குழு... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் தடகள மாணவிக்கு நிதியுதவி

கன்னியாகுமரியில் தடகள மாணவிக்கு கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி. செல்வகுமாா் நிதியுதவி வழங்கினாா். கன்னியாகுமரியை அடுத்த சுவாமிநாதபுரத்தைச் சோ்ந்த ரிந்தியா, கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 12ஆ... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே விஷம் குடித்த காவலா் மருத்துவமனையில் உயிரிழப்பு

களியக்காவிளை அருகே தந்தையின் கல்லறையில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த காவலா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். களியக்காவிளை அருகே சூரியகோடு பகுதியைச் சோ்ந்தவா் சம்பத் சந்திரா (38... மேலும் பார்க்க