செய்திகள் :

சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: வனத் துறை அமைச்சா் உத்தரவு

post image

சென்னை: தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

சென்னை, கிண்டியில் உள்ள முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் அலுவலகத்தில் காதி மற்றும் வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன் தலைமையில், மாநில அளவிலான வனத் துறை உயா் அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழகத்தில் மாவட்ட வாரியாக வனத் துறையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், அதன் முன்னேற்றங்கள் குறித்தும் அமைச்சா் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், தமிழகத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், காட்டுப்பன்றிகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

மேலும், யானைகள் காப்பகத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் பராமரிப்பு குறித்தும், மனித - யானை மோதல்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சா் ஆலோசனை மேற்கொண்டாா்.

214 புதிய பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!

திமுக அரசு பொறுப்பேற்று ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 214 புதிய பேருந்துகளை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.சென்னை தீவுத்திடல... மேலும் பார்க்க

'எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் போருக்குச் செல்வேன்' - நயினார் நாகேந்திரன் பேட்டி

தனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக போருக்குச் செல்வேன் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்த... மேலும் பார்க்க

இந்த மே மாதம் தனித்துவமானது.. சொல்லியிருக்கிறார் பிரதீப் ஜான்

சென்னைக்கு இந்த மே மாதம் மிகவும் தனித்துவமான மாதம் என்று சொல்லியிருக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான். மேலும் பார்க்க

மகளிர் விடியல் பேருந்தில் முதல்வர் ஸ்டாலின் பயணம்!

சென்னையில் மகளிர் விடியல் மாநகரப் பேருந்தில் பயணித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.திராவிட முன்னேற்றக் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாம் ... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் துணை நிற்கிறோம்! முதல்வர் ஸ்டாலின்

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் துணை நிற்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமி... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்துக்கு ராயல் சல்யூட்: விஜய்

இந்திய பாதுகாப்புப் படையின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான... மேலும் பார்க்க