செய்திகள் :

'எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் போருக்குச் செல்வேன்' - நயினார் நாகேந்திரன் பேட்டி

post image

தனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக போருக்குச் செல்வேன் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின் தாக்குதல் குறித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "இந்தியா சுதந்திரமடைந்தபோது ஏற்பட்ட சந்தோஷத்தைவிட இன்று நான் அடைந்த சந்தோஷம் மிகவும் அதிகம். இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது. காஷ்மீர் பயங்கரவாத சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்களின் ஆன்மா சாந்தி அடையும். பிரதமர் மோடி தனி நபர் அல்ல, 140 கோடி இந்தியர்களின் சிகரமாக விளங்குகிறார். 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

காங்கிரஸ் முதல்வராக இருக்கக்கூடிய ரேவந்த் ரெட்டி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியதற்காக என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியா நடத்திய தாக்குதலுக்கு எந்த நாடு வருத்தமடைந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. இந்தத் தாக்குதலுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி. இந்தியாவின் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் வைக்கக் காரணம் என்னவென்றால், பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்கள் 'செந்தூரம்' அதாவது குங்குமத்தை வைக்க முடிவவில்லை. அதற்காகத் தான் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

போர் ஒத்திகை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'நான் போருக்குச் செல்ல முடியவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் போருக்குச் செல்வேன். நான் இதை விளையாட்டுக்குச் சொல்லவில்லை' என்று கூறினார்.

பாஜகவில் இருந்து திருமாவளவனுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு, 'அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். நான் இதுவரை கூட்டணி குறித்து அவரிடம் பேசவில்லை. மற்றவர்கள் யாரும் பேசினார்களா? எனத் தெரியவில்லை' என்றார்.

'தேச ஒற்றுமை குறித்து தமிழக முதல்வர் பேசியதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திமுக, அதிமுக, பாஜக எந்த கட்சியாக இருந்தாலும் தேச உணர்வு இருக்க வேண்டும். 2026 தேர்தலில் 'வெற்றிவேல் வீரவேல்' எனும் ஆபரேஷனை ஆரம்பிப்போம்'

விஜய்க்கு சால்வை அணிவிக்கச் சென்றவரை அவரது பாதுகாவலர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து, யாரும் ஆயுதம் ஏந்தக்கூடாது என்றார்.

ஒய் பிரிவு பாதுகாப்பு நீங்கள் கேட்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு, 'நான் முதல்வரை பெரிதும் மதிக்கக் கூடியவர். நயினார் நாகேந்திரன்தான் எல்லோருக்கும் பாதுகாப்பு வழங்கக் கூடியவர். அதனால் அவருக்கு எதற்கு பாதுகாப்பு என்று முதல்வர் நினைத்திருப்பார்" என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | 'நாம் யாருமே போரை விரும்பவில்லை; ஆனால்...' - ஒமர் அப்துல்லா கருத்து

ஜாதி வாரி கணக்கெடுப்பு: கால அட்டவணை வெளியிட ராமதாஸ் கோரிக்கை

ஜாதி வாரி கணக்கெடுப்புக்கான காலஅட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் எழுதிய கடிதம்: ஆங்கிலேயா் ஆட்... மேலும் பார்க்க

பொறியியல் கலந்தாய்வு: முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!

பொறியியல் கலந்தாய்வுக்கு முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பத... மேலும் பார்க்க

மே 11-ல் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளைப் பயன்படுத்த வேண்டாம்: அன்புமணி

மாமல்லபுரத்தில் வருகிற 11-ஆம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளைப் பயனபடுத்த வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.முழு நிலவு மாநாட்டுக்க... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற... மேலும் பார்க்க

பொறியியல் சோ்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.நாளை +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில் பொறியியல் மட்டுமல்லா... மேலும் பார்க்க

சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தற்போது சிபிஐ இயக்குநராக உள்ள பிரவீண் சூட், மே 25-ஆம் தேதியுடன் தனது இரண்டு ஆண்டுகால பதவிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய புலனாய... மேலும் பார்க்க