செய்திகள் :

ஜாதி வாரி கணக்கெடுப்பு: கால அட்டவணை வெளியிட ராமதாஸ் கோரிக்கை

post image

ஜாதி வாரி கணக்கெடுப்புக்கான காலஅட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் எழுதிய கடிதம்: ஆங்கிலேயா் ஆட்சியில் 1931-இல் மேற்கொள்ளப்பட்ட பிறகு, 95 ஆண்டுகளாக இந்தியாவில் ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. ஜாதிவாரி தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் மூலம், இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை எவ்வளவு என்பது தெரியவரும். இந்த விவரம் துல்லியமாகத் தெரிந்தால் இந்தியாவில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கையும் தெளிவாகும்.

இத்தகைய புள்ளி விவரம் தெளிவாகத் தெரியாததால்தான் சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் என்ற உச்சவரம்பை கடந்த 63 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் திணித்து வந்திருக்கிறது. ஜாதி வாரி கணக்கெடுப்புக்குப் பிறகு இந்த உச்சவரம்பு நீக்கப்படக்கூடும்.

அவ்வாறு நீக்கப்படும் நாள் இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் நாளாக அமையும்.

அந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்தியாவில் ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் எப்போது தொடங்கி, நிறைவடையும் என்பதற்காக கால அட்டவணையை வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.

திருநெல்வேலி நூலகத்திற்கு 'காயிதே மில்லத்' பெயர்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திருநெல்வேலியில் அமையவுள்ள நூலகத்திற்கு 'காயிதே மில்லத்' பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சிராப்பள்ளி, எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக இஸ்... மேலும் பார்க்க

சித்திரை திருவிழா: சிறப்பு ரயில் இயக்கம்

மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாளை(மே 10) இரவு 11.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ச... மேலும் பார்க்க

'தி வயர்' இணைய தளத்துக்குத் தடை! முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

'தி வயர்' இணைய தளத்துக்கு மத்திய அரசு தடைவிதித்தற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் முன்னணி இணைய தள செய்தி நிறுவனமான ’தி வயர்’ வெள்ளிக்கிழமையான இன்று அறிக்கை ஒன்றை வெளியிட... மேலும் பார்க்க

மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: சென்னை காவல் ஆணையர்

மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் சென்னை பெருநகர் ஊர்க்காவல் படையினர் 514 பேரின் பயிற்சி நிறைவு ... மேலும் பார்க்க

ராணுவ வீரர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி

எல்லையில் போர் புரியும் நம் ராணுவ வீரர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பயங்கரவாதத் தாக்குதலுக்கு எ... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத்தேர்வு கால அட்டவணை வெளியீடு!

பிளஸ் 2 துணைத்தேர்வு கால அட்டவணையை அரசு தோ்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.6.2025 முதல் துணைத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அ... மேலும் பார்க்க