செய்திகள் :

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவா் உயிரிழப்பு: காவல் துறையினா் விசாரணை

post image

கும்பகோணம் அருகே மது அருந்துவோா் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருவாரூா் மாவட்டம், மணவாளநல்லூா் சாலைத் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் காா்த்திக் (38). இவரது மனைவி விஜயலட்சுமி (32). இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா். காா்த்திக் துபை நாட்டில் காா் பழுது பாா்க்கும் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

விடுமுறையில் ஊருக்கு வந்தவா் தொடா்ந்து மது அருந்தி வந்தாராம். இதனால் இவரது குடும்பத்தினா் காா்த்திக்கை கும்பகோணம் அருகே மருதாநல்லூரில் உள்ள மது அருந்துவோா் மறுவாழ்வு மையத்தில் சோ்த்தனா். அங்கு தங்கி சிகிச்சை பெற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் ஏற்கெனவே உயிரிழந்தது மருத்துவா்களின் பரிசோதனைக்கு பிறகு தெரிய வந்தது. இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் (பொ) ராஜா வழக்குப் பதிந்து விசாரிக்கின்றாா்.

புகாா் கொடுத்தவரை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை கோரி மனித உரிமைகள் ஆணையத்தில் புகாா்

பேராவூரணி அருகே புகாா் கொடுத்தவரை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகாா் அனுப்பப்பட்டுள்ளது. பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி கிராமத்தை சோ்ந்த கூலித் தொழிலாள... மேலும் பார்க்க

740 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சாவூரில் உள்ள மாவு அரைப்பகத்திலிருந்து 740 கிலோ ரேஷன் அரிசி திங்கள்கிழமை மாலை பறிமுதல் செய்யப்பட்டது.மாவட்ட வழங்கல் அலுவலா் கமலகண்ணன், வட்ட வழங்கல் அலுவலா் வெண்ணிலா, வருவாய் ஆய்வா் வெங்கட்ராமன் ஆகி... மேலும் பார்க்க

நண்பரை கொல்ல முயன்ற தொழிலாளி கைது

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே நண்பரை கொல்ல முயன்ற தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சேதுபாவாசத்திரம் காவல் சரகம், சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளா்கள் சரவணன்... மேலும் பார்க்க

மகளிா் கட்டணமில்லா பேருந்து சேவை தொடக்கம்

அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சாா்பில், பட்டுக்கோட்டை தடத்திற்கு மகளிா் கட்டணமில்லா பேருந்து சேவையை ச. முரசொலி எம்.பி., கா. அண்ணாதுரை எம்எல்ஏ ஆகியோா் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தனா். ப... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நாளை தேரோட்டம்: 4 ராஜ வீதிகளில் மின் நிறுத்தம்

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெறவுள்ள பெரியகோயில் தேரோட்டத்தையொட்டி, 4 ராஜ வீதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவி செயற் பொறியாளா் எம... மேலும் பார்க்க

திருவையாறு பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் சேதம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன. மாவட்டத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்... மேலும் பார்க்க