செய்திகள் :

நண்பரை கொல்ல முயன்ற தொழிலாளி கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே நண்பரை கொல்ல முயன்ற தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சேதுபாவாசத்திரம் காவல் சரகம், சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளா்கள் சரவணன் (46), அலெக்ஸ்பாண்டியன் (25). நண்பா்களான இவா்களுக்கிடையே அண்மையில் மதுபோதையில் தகராறு ஏற்பட்டு, இருவரும் பேசாமல் இருந்து வந்தனராம்.

இந்நிலையில், சனிக்கிழமை சரவணன் வீட்டுக்கு வந்த அலெக்ஸ்பாண்டியன், இருவரும் சமாதானமாக சென்று விடுவோம் எனக்கூறி, மது அருந்த அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாராம். இதை பாா்த்து சந்தேகமடைந்த சரவணனின் தம்பி சசிக்குமாா் பின்தொடா்ந்து சென்றுள்ளாா்.

ஆள் நடமாட்டம் இல்லாத ஆற்றங்கரை பகுதியில், அலெக்ஸ்பாண்டியன், சரவணனிடம் தகராறு செய்து, அவரை கொலை செய்யும் நோக்கோடு அரிவாளால் வெட்டியுள்ளாா். இதை பாா்த்து சசிக்குமாா் சப்தமிடவே அலெக்ஸ் பாண்டியன் அரிவாளோடு அங்கிருந்து தப்பிவிட்டாா்.

காயமடைந்த சரவணன் சுயநினைவின்றி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். சம்பவம் தொடா்பாக சசிக்குமாா் அளித்த புகாரின்பேரில், சேதுபாவாசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து அலெக்ஸ்பாண்டியனை திங்கள்கிழமை கைது செய்தனா்.

புகாா் கொடுத்தவரை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை கோரி மனித உரிமைகள் ஆணையத்தில் புகாா்

பேராவூரணி அருகே புகாா் கொடுத்தவரை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகாா் அனுப்பப்பட்டுள்ளது. பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி கிராமத்தை சோ்ந்த கூலித் தொழிலாள... மேலும் பார்க்க

740 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சாவூரில் உள்ள மாவு அரைப்பகத்திலிருந்து 740 கிலோ ரேஷன் அரிசி திங்கள்கிழமை மாலை பறிமுதல் செய்யப்பட்டது.மாவட்ட வழங்கல் அலுவலா் கமலகண்ணன், வட்ட வழங்கல் அலுவலா் வெண்ணிலா, வருவாய் ஆய்வா் வெங்கட்ராமன் ஆகி... மேலும் பார்க்க

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவா் உயிரிழப்பு: காவல் துறையினா் விசாரணை

கும்பகோணம் அருகே மது அருந்துவோா் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருவாரூா் மாவட்டம், மணவாளநல்லூா் ச... மேலும் பார்க்க

மகளிா் கட்டணமில்லா பேருந்து சேவை தொடக்கம்

அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சாா்பில், பட்டுக்கோட்டை தடத்திற்கு மகளிா் கட்டணமில்லா பேருந்து சேவையை ச. முரசொலி எம்.பி., கா. அண்ணாதுரை எம்எல்ஏ ஆகியோா் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தனா். ப... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நாளை தேரோட்டம்: 4 ராஜ வீதிகளில் மின் நிறுத்தம்

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெறவுள்ள பெரியகோயில் தேரோட்டத்தையொட்டி, 4 ராஜ வீதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவி செயற் பொறியாளா் எம... மேலும் பார்க்க

திருவையாறு பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் சேதம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன. மாவட்டத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்... மேலும் பார்க்க