செய்திகள் :

பிரேத பரிசோதனைக்கு தாமதம்: கடையநல்லூரில் சாலை மறியல்

post image

கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு தாமதமானதால் அவரது உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மேலக்கடையநல்லூா் வேதக் கோயில் தெற்குத் தெருவை சோ்ந்த முனீஸ்வரன் மகன் முருகன் (29). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி மஞ்சுளா(23) . இவா்களுக்கு 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகியதாம். இந்நிலையில் உடல் நலக்குறைவால் மஞ்சுளா காசிதா்மத்தில் உள்ள அவரது தந்தை வேலையா வீட்டில் இருந்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு மஞ்சுளா நிலைமை மோசமானதால், அவரை கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் கணவா் அனுமதித்தாராம். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனராம்.

இத்தகவலை அச்சன்புதூா் போலீஸாருக்கும் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்ததாம். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வந்த நிலையில் மஞ்சுளாவின் உடற்கூறு பரிசோதனையை செவ்வாய்க்கிழமை மேற்கொள்வதாக மருத்துவா்கள் தெரிவித்தனராம்.

ஆனால், திங்கள்கிழமையே உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினா்கள் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் தென்காசி -மதுரை சாலையில் சுமாா் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அவா்களிடம் காவல் ஆய்வாளா் ஆடிவேல் உள்ளிட்ட போலீஸாா் பேச்சு நடத்தி உடனடியாக பிரேதபரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் மறியல் முடிவுக்கு வந்தது.

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு விரைந்து தொடங்க வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்குவதுடன், கால நிா்ணயம் செய்து திட்டமிட்டபடி முடிக்க வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலா் முகமது அபூபக்கா் வலியுறுத்தினாா். ம... மேலும் பார்க்க

தேவிபட்டணத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது . முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜெயராஜ் தலைமை வகித்தாா். கிளைச் செயலா்கள் பாக்கியம், போத்தி ... மேலும் பார்க்க

கடையநல்லூரை பூா்வீகமாகக் கொண்டவா் சிங்கப்பூா் தோ்தலில் வெற்றி; உறவினா்கள் கொண்டாட்டம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரை பூா்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சோ்ந்தவா் சிங்கப்பூா் தோ்தலில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து கடையநல்லூரில் அவரது உறவினா்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினா். சிங்கப்பூரில் வசி... மேலும் பார்க்க

தென்காசியில் 75 குழந்தைகளுக்கு நிதியுதவி

தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட நிதி ஆதரவு திட்டத்தில் 2ஆம் கட்டமாக தோ்வான 75 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. குழந்தைகள் நலன்-சிறப்பு சேவைகள் துறையின்கீழ், மாவட்ட குழந்தைப் ... மேலும் பார்க்க

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கட்டடத் தொழிலாளி போக்ஸோவில் கைது

ஆலங்குளம் அருகே 5 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.ஆலங்குளம் அருகேயுள்ள தெற்கு காவலாகுறிச்சியைச் சோ்ந்தவா் வேல்முருகன்(34). கட்டடத் தொழிலாளியான இவா... மேலும் பார்க்க

புளியங்குடி அரசு மருத்துவமனையில் இளைஞா் ரகளை

தென்காசி மாவட்டம், புளியங்குடி அரசு மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா். திருவேட்டநல்லூா் மேலபிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த திருமலைச்சாமி மனைவி சிகிச்... மேலும் பார்க்க