செய்திகள் :

``சமூக அநீதிகளுக்கு எதிரான இடைவிடாத போராட்டம்'' - தந்தை பெரியார் குறித்து பினராயி விஜயன்

post image

தமிழ்நாடு அரசியலில் நீக்கமற நிறைந்திருப்பவர் தந்தை பெரியார். பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர் எனச் சாமான்ய மக்களால் புகழப்படும் பெரியாரின் 147-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் அவருக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும், எம்.பி-யுமான கமல் ஹாசன் எனப் பலரும் தந்தை பெரியாரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்தநிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தன் எக்ஸ் பக்கத்தில் தமிழில் தந்தைப் பெரியாரின் பிறந்த நாளுக்காக பதிவிட்டிருக்கிறார்.

அவரின் பதிவில், "பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறோம். சாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது.

பெரியாரின் பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய கொள்கைகள், நீதி மற்றும் முற்போக்கான சமூகத்திற்கான நமது போராட்டத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து பல்வேறு அரசியல் ஆளுமைகளும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

இபிஎஸ் டெல்லி பயணம்: "மகாராஷ்டிராவைப் போல் ஆட்சியைப் பிடிக்க பாஜக நினைக்கிறது" - மாணிக்கம் தாகூர் MP

பா.ஜ.க-வின் வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கத்தை எம்.பி. மாணிக்கம் தாகூர் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது, செங்கல்லை ஓரம் கட... மேலும் பார்க்க

மதுரை விமான நிலையம்: பெயர் சூட்டும் அறிவிப்பால் சர்ச்சை கிளப்பினாரா இபிஎஸ்? தலைவர்கள் சொல்வது என்ன?

"முத்துராமலிங்க தேவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கவும், மதுரை விமான நிலையத்துக்கு அவர் பெயரைச் சூட்டவும் நடவடிக்கை எடுப்போம்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் மாவட்ட பிரசார பய... மேலும் பார்க்க

Canada: ``இந்திய தூதரகத்தை முற்றுகையிடுகிறோம்; இங்கே வராதீர்கள்'' - காலிஸ்தான் ஆதரவாளர்கள்

2023-ம் ஆண்டு காலிஸ்தான் ஆதரவாளரான நிஜ்ஜார் கொலை இந்தியா - கனடா உறவில் கொஞ்சம் கொஞ்சமாக விரிசலை உண்டாக்கியது, பெரிதாக்கியது. அவரது கொலைக்கு இந்தியாவே காரணம் என்று கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ர... மேலும் பார்க்க

``2026 தேர்தலுக்கு பிறகு பழனிசாமி நடுரோட்டில் நிற்கப்போகிறார்'' - டிடிவி தினகரன் காட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டையை வைத்து மற... மேலும் பார்க்க

ADMK: `உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த காரணம்' - எடப்பாடி பழனிசாமியின் பதிவு வைரல்!

கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார் செங்கோட்டையன். இதை சகித்துக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி அப்போதே, கட்சிப் பொறுப்ப... மேலும் பார்க்க

``எடப்பாடி முகத்தை மூடிக்கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?'' - டிடிவி தினகரன் கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று(செப்.16)இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டையை வைத்து மறைத... மேலும் பார்க்க