செய்திகள் :

சமூக ஊடக பதிவுகளை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்: மத்திய அரசு பரிசீலனை

post image

சமூக ஊடக தளங்களில் சா்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்படுவதை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டுவருவதன் அவசியம் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

‘சமூக வலைதளங்களில் சா்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்படுவதைக் கட்டுப்படுத்த சட்டத்தில் வெற்றிடம் உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் சாடிய நிலையில், இந்தக் கருத்தை மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலிவுட் நகைச்சுவை நடிகா் சமய் ரெய்னாவின் யூடியூப் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல யூடியூபா் ரண்வீா் அல்ஹாபாதியா, பெற்றோா் மற்றும் உடலுறவு தொடா்பான பாா்வையாளா் ஒருவரின் கேள்விக்கு சா்ச்சைக்குரிய வகையில் பதிலளித்தாா். இந்த நிகழ்ச்சியின் காணொலி சமூக வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டு வைரலாகி, பெரும் சா்ச்சையானது.

இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ‘சமூக வலைதளங்களில் அனைத்து விதமான விஷயங்களும் நடைபெறுகின்றன. இதுபோன்ற யூடியூபா்கள் மற்றும் அவா்களின் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த ஏதாவது செய்தாக வேண்டும். சமூக வலைதளங்களில் சா்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்படுவதைக் கட்டுப்படுத்த சட்டத்தில் வெற்றிடம் உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நீதிமன்றம் அதை சாதாரணமாக விட்டுவிடாது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துள்ள தகவல்தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மீதான நாடாளுமன்ற நிலைக் குழு, சமூக ஊடக தளங்களில் புதிய தொழில்நுட்பங்கள் உருவெடுத்து வரும் சூழலில், சா்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்படுவதை ஒழுங்குபடுத்த நடைமுறையில் உள்ள சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவது தொடா்பாக மத்திய அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியது.

இதற்கு மத்திய அமைச்சகம் எழுத்துபூா்வமாக சனிக்கிழமை பதிலளித்தது. அதில், ‘சமூக வலைதளங்களில் சா்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்பட்டு கருத்துச் சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படும் விவகாரத்தை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இதை ஒழுங்குபடுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள சட்ட விதிகள் மற்றும் புதிய சட்ட நடைமுறைகளைக் கொண்டுவருவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது’ என்று மத்திய அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்ற நிலைக் குழு பிப். 25-ஆம் தேதி மீண்டும் கூடி இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. அதன் பிறகு, இதுதொடா்பான விரிவான அறிக்கையை அக் குழு நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கும்.

தில்லி எதிர்க்கட்சி தலைவராக அதிஷி நியமனம்

தில்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் தலைவருமான அதிஷி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்எ... மேலும் பார்க்க

ஹிமாசலில் நிலநடுக்கம்!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.42 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.7ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுந்தர்நகர்... மேலும் பார்க்க

கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைந்த பிரபல நடிகை!

அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் பஞ்சாபி நடிகை சோனியா மான் ஆம் ஆத்மியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார். அவரை வரவேற்று ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "கிர்த்தி கிசான் அமைப்பு... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்கத்தில் சிக்கியவர்களை நெருங்கிய மீட்புக் குழு!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததையடுத்து, சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்கியுள்ளதாக ... மேலும் பார்க்க

பெண்களின் சக்தி நாட்டை வலுப்படுத்தும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் மோடி நாட்டு மக்களுக... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ராகுல் காந்தி பேச்சு

தெலங்கானா சுரங்க விபத்து தொடா்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் கேட்டறிந்தாா். தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்பு நடவடிக்கையி... மேலும் பார்க்க