செய்திகள் :

சம்பல் மசூதி ஆய்வுக்கு எதிரான மனு: அலாகாபாத் உயா்நீதிமன்றம் தள்ளுபடி

post image

பிரயாக்ராஜ்/சம்பல்: உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியின் ஆய்வுக்கு எதிராக மசூதி நிா்வாக குழு தாக்கல் செய்த மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முகலாயா்கள் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா மசூதியானது ஹிந்துக்களின் கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மசூதியை நீதிமன்ற ஆணையா் தலைமையில் ஆய்வு செய்ய, கடந்த ஆண்டு நவ.19-ஆம் தேதி சம்பல் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அன்றைய தினமே அங்கு முதல் ஆய்வு நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து அந்த ஆண்டு நவ.24-ஆம் தேதி மசூதியில் இரண்டாவது ஆய்வு நடைபெற்றது. அப்போது ஆய்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும், காவல் துறையினருக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறை நிகழ்ந்தது. இதில் 4 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

இந்நிலையில், மசூதியை ஆய்வு செய்ய சம்பல் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மாநிலத்தில் உள்ள அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மசூதி நிா்வாக குழு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான வாதங்கள் ஏற்கெனவே நிறைவடைந்து தீா்ப்பை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

அந்த மனு மீது உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை அளித்த தீா்ப்பில், ‘சம்பல் மசூதியை நீதிமன்ற ஆணையா் தலைமையில் ஆய்வு செய்ய உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதே. மசூதி தொடா்பாக ஹிந்துக்கள் தொடுத்துள்ள வழக்கும் விசாரணைக்கு உரியதே’ என்று தீா்ப்பளித்து நிா்வாக குழுவின் மனுவை தள்ளுபடி செய்தது.

ஷெல் தாக்குதலுக்குள்ளான பகுதிகளைப் போர் பாதித்த மண்டலங்களாக அறிவிக்கவும்: மெஹபூபா

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை "போர் பாதிக்குள்ளான மண்டலங்கள்" என்று அறிவிக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். செய்தியாள... மேலும் பார்க்க

வெளிநாடு செல்லும் குழுவிலிருந்து யூசுப் பதான் விலகல்! அபிஷேக் பானர்ஜி சேர்ப்பு!

வெளிநாட்டுக்குச் செல்லும் எம்பிக்கள் குழுவிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதான் விலகியதாகவும், அவருக்கு பதிலாக அபிஷேக் பானர்ஜி செல்வார் என்றும் அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆபரேஷ... மேலும் பார்க்க

மும்பையில் தலைமை நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்! காரணம் என்ன?

சமீபத்தில் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மும்பைக்கு வந்திருந்தபோது, வரவேற்க மாநிலத்தின் உயரதிகாரிகள் யாரும் வராதது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடும் அதிருப்தி தெரிவித்த நிலை... மேலும் பார்க்க

விளையாட்டு வீரர்களுக்குத் தில்லி அரசு உரிய வசதிகள் வழங்கும்: முதல்வர்!

தில்லி விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாஜக அரசு வழங்கும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார். தல்கடோரா மைதானத்தில் தில்லி விளையாட்டு-2025ஐ முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

இந்தியாவில் 257 பேருக்கு கரோனா! தமிழகம், கேரளம், மகாராஷ்டிரத்தில் பாதிப்பு!

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்த நிலையில் தற்போது சீனா, சிங்கப்பூர் நாடுகளில் அதிகமாகப் பரவி வருகிறது. இந்தி... மேலும் பார்க்க

நீதித்துறை பணிக்கு 3 ஆண்டுகள் வழக்குரைஞர் அனுபவம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

நீதித்துறை பணியில்(முன்சீப், மாஜிஸ்திரேட்) விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆ... மேலும் பார்க்க