செய்திகள் :

சரிவிலிருந்து மீளுமா பங்குச்சந்தை? சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

post image

தொடர்ந்து 7 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தை இன்று(மார்ச் 26) இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,021.45 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பிற்பகல் 12.18 மணியளவில், சென்செக்ஸ் 369.12 புள்ளிகள் குறைந்து 77,648.07 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 74.20 புள்ளிகள் குறைந்து 23,594.45 புள்ளிகளில் இருக்கிறது.

சென்செக்ஸ் பங்குகளில் இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிட், பாரதி ஏர்டெல், எம்&எம் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது.

அதேநேரத்தில் சொமாட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி, ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.

கடந்த 7 நாள்களாக பங்குச்சந்தை ஏற்றத்தில் முடிவாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றும் பங்குச்சந்தை சரிவிலிருந்து மீளுமா? என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இதையும் படிக்க | கணினி முன் அமர்ந்து வேலை செய்பவரா? முதுகெலும்பு பிரச்னை வராமல் தடுப்பது எப்படி?

ஒரு மணிநேரத்தில் 10 லட்சம் பயனர்கள்! ஜிப்லியால் சாட்ஜிபிடி சாதனை!!

உலகளவில் ஜிப்லி பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், ஒருமணி நேரத்தில் 10 லட்சம் புதிய பயனர்களை சாட்ஜிபிடி எட்டியுள்ளது.ஓபன் ஏஐ நிறுவனத்துக்குச் சொந்தமான சாட்ஜிபிடி என்னும் செய்யறிவு தொழில்நுட்பத்தின் பு... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு! ஐடி, வங்கித் துறை வீழ்ச்சி!

2025 - 26 நிதியாண்டின் முதல் நாளான இன்று (ஏப். 1) பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 1,391 புள்ளிகளும் நிஃப்டி 23,200 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின... மேலும் பார்க்க

கூகுள் பிக்சலுக்கு இணையாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான 13 டி இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ்... மேலும் பார்க்க

நிதியாண்டின் முதல் நாளில் கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

2025-26 நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் தொடங்கியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ள வரி நாளை முதல் அமலுக்கு வருவதால் உலகளாவிய சந்தைகளில் நிச்... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி உயர்வு: ரூ. 68,000-ஐ கடந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ. 680 உயர்ந்துள்ளது.வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.67,400 என்ற புதிய உச்சத்தை தொட்டது.இந்த ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் அதிவேக டேட்டாவை வழங்குகிறது ஜியோ! காரணம் என்ன?

மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் அதிவேக இணைய சேவையை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இதற்குக் காரணம், ஜியோ நிறுவனம் தனது அலைதிறனை மேம்படுத்தியதுதான் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது, 5ஜி இணைய ... மேலும் பார்க்க