செய்திகள் :

கூகுள் பிக்சலுக்கு இணையாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்!

post image

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான 13 டி இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது பிரியம் கொண்ட பயனர்களுக்கு இம்மாதம் மகிழ்ச்சியான செய்தி வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.

சீனாவின் குவாங்டொங் மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்பிளஸ் நிறுவனம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு டி - வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

இறுதியாக 10 டி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது. அமெரிக்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்து இந்த ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் வெளியிட்டிருந்தது.

(OnePlus 13T) ஒன்பிளஸ் 13 டி - என்ன சிறப்பு?

ஒன்பிளஸ் 13 டி ஸ்மார்ட்போனானது, 6.3 அங்குல சமதள திரையுடன் 1.5K திறன் கொண்டது. 6200mAh திறனுடைய பேட்டரியுடன் அதிவேக சார்ஜிங் அம்சமும் (80W) இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்நாப்டிராகன் 8 எலைட் எஸ்.ஓ.சி. இயங்குதளம் கொண்டுள்ளதால், அதிக திறன் கொண்ட விளையாட்டுகளையும் இதில் எந்தவித தடையுமின்றி விளையாட முடியும். இதனால் மின்கலனோ அல்லது இயங்குதளமோ சேதாரமடையாது.

கூகுள் பிக்ஸல் 9 தயாரிப்பின் புற வடிவத்தை தழுவி ஒன்பிளஸ் 13 டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி பின்புறம் உலோகத்தால் (மெட்டல்) ஆன வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பார்வைக்கு பிரீமியம் ஸ்மார்ட்போன் உணர்வை ஏற்படுத்தக்கூடியது.

ஒன்பிளஸ் 11 மாடலில் வரிசையாக அடுத்தடுத்த ஸ்மார்ட்போன்களை ஒன்பிளஸ் அறிமுகம் செய்தது. அதன் பிறகு ஒன்பிளஸ் 13 மாடல் வரிசைகளுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 8 முதல் ரூ.62,000 வரை விலையை உயர்த்தும் மாருதி சுசூகி!

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் தனது பயணிகளின் வாகனங்களின் விலையை ரூ.62,000 வரை உயர்த்துவதாக அறிவித்தது.அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவுகள்... மேலும் பார்க்க

2024-ல் சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனம் ஜியோ!

2024ஆம் ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ தேர்வு செய்யப்பட்டுள்ளது.இணைய வேகத்தையும் தொலைத்தொடர்பு அலைவரிசையையும் கணக்கிட்டுவரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஓக்லா நிறுவனம் அளித்துள்ள தரவுகளின் அடி... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ.85.52-ஆக முடிவு!

மும்பை: வர்த்தக கட்டணங்கள் மீதான நிச்சயமற்ற தன்மையால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 2 காசுகள் சரிந்து ரூ.85.52 ஆக நிலைபெற்றது.டிரம்பின் பரஸ்பர கட்டண கவலைகள் மற்றும் அந்நிய நிதி... மேலும் பார்க்க

ஐக்யூ நிறுவனத்துக்குப் போட்டியாக ரியல்மி! ஏப். 9-ல் 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

ரியல்மி நிறுவனத்தின் இரு புதிய ஸ்மார்ட்போன்கள் ஏப். 9ஆம் தேதி அறிமுகமாகின்றன. நர்ஸோ வரிசையில் ரியல்மி நர்ஸோ 80 ப்ரோ மற்றும் நர்ஸோ 80எக்ஸ் ஆகிய இரு போன்கள் இந்தியாவில் அறிமுகமாகின்றன. இந்த இரு ஸ்மார்ட்... மேலும் பார்க்க

ஐபிஎல் ரசிகர்களுக்காக... ஒரு ரூபாய்க்கு 1 ஜிபி! பிஎஸ்என்எல் புதிய அறிவிப்பு!!

ஐபிஎல் ரசிகர்களைக் கவரும் வகையில், ஒரு ரூபாயில் இணைய சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்படைந்துள்ள நிலையில், பல்வேறு தொல... மேலும் பார்க்க

பரஸ்பர வரி அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி கிட்டத்தட்ட 1% உயர்வு!

மும்பை: வலுவான மேக்ரோ தரவுகள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து வாங்கியதாலும் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான சென்செக்ஸ் இன்று சுமார் 593 புள்ளிகள் உயர்ந்து முடிந்தது.வர்த்தக நேர துவக்கத... மேலும் பார்க்க