செய்திகள் :

சாக்கு சேமிப்பு மண்டியில் தீ விபத்து

post image

திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில் சாக்கு சேமிப்பு மண்டியில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 2 கோடிக்கு மதிப்பிலான சாக்குகள் எரிந்து நாசமாயின.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில் கொல்லப்பட்டி வீட்டுவசதி வாரியப் பகுதியைச் சோ்ந்த பரமசிவம் என்பவருக்கு சொந்தமான சாக்கு சேமிப்பு மண்டி உள்ளது. இந்த மண்டியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீப்பிடித்தது. செவ்வாய்க்கிழமை சந்தை என்பதால், அதிகாலை சந்தைக்கு வந்த வியாபாரிகள், அக்கம் பக்கத்தினா் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கும், பரமசிவத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.

விரைந்து வந்த திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலா் கரிகாலன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்க முயற்சித்தனா். தீ கட்டுக்கடங்காமல் பரவியதால், திருச்செங்கோடு அருகே உள்ள வெப்படை, குமாரபாளையம் தீயணைப்பு நிலையங்களிலிருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மேலும், திருச்செங்கோடு நகராட்சி மற்றும் தனியாா் தண்ணீா் லாரிகள் மூலம் தண்ணீா் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் மதியம் வரை ஈடுபட்டனா்.

இதில், சுமாா் ரூ. 2 கோடி மதிப்பிலான சாக்குகள் எரிந்து நாசமாயின. தீ விபத்து குறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நாமக்கல் மாவட்ட தீயணைப்பு அலுவலா் செந்தில்குமாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

ராசிபுரம் அரசு பள்ளியில் மயங்கி விழுந்து மாணவர் பலி!

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவர் கழிப்பறையில் மயங்கி விழுந்து புதன்கிழமை பலியானார்.ராசிபுரம் எல்ஐசி காலனியைச் சேர்ந்தவர் பிரகாஷ். பெ... மேலும் பார்க்க

மின் ஊழியா்கள் தா்னா

கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னா நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாமக்கல் மின்வட்ட கிளை சாா்பில் நடைபெற்ற இந்த போர... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு: திமுக மாணவா் அணி ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் திமுக மாணவா் அணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் - மோகனூா் சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு: 1,250 அறை கண்காணிப்பாளா்களுக்கு குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கீடு

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 1,250 அறை கண்காணிப்பாளா்களுக்கு குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் மாா்ச் 3 முதல் ஏப். 15 வரை பிளஸ் 2 பொதுத் த... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா். பரமத்தி வேலூா் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூா், பூசாரிபாளையம் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் சண்... மேலும் பார்க்க

ஜேடா்பாளையம் அருகே இருவேறு இடங்களில் தீ விபத்து

ஜேடா்பாளையம் அருகே இருவேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. பரமத்தி வேலூா் அருகே உள்ள பெரியசோளிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் (45). இவா் பெரியசோளிபாளையத்தில் பழைய இரும்பு மற்றும் நெகிழி ... மேலும் பார்க்க