செய்திகள் :

`சாணம் மட்டுமல்ல... மாட்டு தோல் மற்றும் எலும்புகளையும் பயன்படுத்த வேண்டும்' - அமித் ஷா வலியுறுத்தல்

post image

மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேறி நகரங்களுக்கு செல்லாமல் தடுக்கும் ஒரே வழி, பால் துறையை சிறப்பாக பராமரிப்பது மட்டும்தான் எனப் பேசியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த துறையில் பொருளாதார சுழற்சியில் சாணத்தை விற்பனைப் பொருளாக்குவதுடன் நின்றுவிடக் கூடாது என்றும்... மாட்டின் தோல் மற்றும் எலும்புகளையும் பயன்படுத்த வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

மாட்டுப் பண்ணை

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையால் நடத்தப்பட்ட 'பால்துறையின் நிலைத்தன்மை மற்றும் சுழற்சி' என்ற பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்த அமித் ஷா, 'தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம்' மாட்டின் தோல் மற்றும் எலும்பை விற்பனைப் பொருளாக்குவதற்கான சிறிய கூட்டுறவுகளை ஒழுங்கமைக்கும் சாத்தியக்கூறுகளைத் ஆய்வு செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

Amit Shah பேச்சு

அமித் ஷா மாட்டின் தோலை சிறிய கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பதப்படுத்தி, ஷூ தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம் எனவும் இது, பண்ணை வைத்திருப்பவர்களுக்கு லாபகரமானதாக இருக்கும் எனவும் பேசியுள்ளார். மேலும் மாடு வளர்ப்பில் 100% பொருளாதார சுழற்சியை கூட்டுறவு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அமித் ஷா

மாட்டு சாணத்தை இயற்கை எரிவாயுவாக மாற்றும் செயல்பாட்டில் தனியார் பண்ணைகளுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்றும், பால்துறைக்கு தேவையான அனைத்து இயந்திரங்களையும் கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும், சர்வதேச ஏற்றுமதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

அமித் ஷா, "இப்போது பண்ணை முதல் தொழிற்சாலை வரை அத்தனையையும் கிராமங்களிலேயே அமைப்பதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். விளிம்பில் உள்ள விவசாயிகளைத் தூக்கிவிடுவதற்கு கிராமத்தில் இருந்து உலக அரங்குக்கு செல்வதற்கான வரைபடத்தை உருவாக்க வேண்டும். மதிப்புக் கூட்டுவதற்காக பண்ணையில் இருந்து தொழிற்சாலைக்கு விரிவான வரைபடத்தை உருவாக்க வேண்டும். கூட்டு முயற்சிகள் மூலம் கால்நடை வளர்ப்பவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.

Ooty: இந்த சம்மருக்கு ஊட்டி போறீங்களா? சிறப்பு மலை ரயில்கள் அறிவிப்பு; எந்தெந்த நாட்களில் தெரியுமா?

சுவிட்சர்லாந்து தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நீராவி ரயில் என்ஜின்கள் நீலகிரியில் நூற்றாண்டுகளைக் கடந்தும் இயங்கி வருகின்றன. யுனெஸ்கோவின் உலக பாரம்பர்ய அந்தஸ்தைப் பெற்ற இந்த மலை ரயிலில் பயணிக்க உலக... மேலும் பார்க்க

போரில் அழிக்கப்பட்ட காஸா நகரம்: இடிபாடுகளுக்கு நடுவே இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா மேலும் பார்க்க

TVK: ஒரு நாள் நோன்பு இருக்கும் விஜய்; சென்னையில் பரபரக்கும் தவெக - இஃப்தார் நிகழ்ச்சி அப்டேட்ஸ்

தவெக சார்பில் இராயப்பேட்டை YMCA மைதானத்தில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நாளை மாலை நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்காக ஒரு நாள் நோன்பு இருக்கும் முடிவில் விஜய் இருக்கி... மேலும் பார்க்க

Jaishankar : லண்டன் பயணத்தில் பாதுகாப்பு அத்துமீறல்; காலிஸ்தானி குழுக்களுக்கு இந்தியா கண்டனம்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இங்கிலாந்துக்கு மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு அத்துமீறலுக்கு, இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. The British almost allowed an att... மேலும் பார்க்க

ஒரே நாளில் திமுக அமைச்சர், எம்.பி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை... பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று, தி.மு.க அமைச்சரின் நண்பர்கள் வீடுகளிலும், தி.மு.க எம்.பி-யின் நிறுவன அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறத... மேலும் பார்க்க

'உங்களால் தான் அமெரிக்காவில் நிறைய மக்கள் இறந்துள்ளனர்...' - ட்ரூடோவிடம் போனில் பேசிய ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் ஆவதற்கு முன்பும், பின்பும் ட்ரம்ப் கடுமையாக சாடி வந்த நாடுகளில் ஒன்று, கனடா. ஒருகட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு வார்த்தை போர்கூட நடந்தது. இ... மேலும் பார்க்க