முதல்வர் பிறந்தநாள்: தமிழில் கையெழுத்திட்டு ஆளுநர் வாழ்த்துக் கடிதம்!
சாதிக்க விரும்புவோருக்கு அறிவாற்றலும், அா்ப்பணிப்பும் அவசியம்: இஸ்ரோ விஞ்ஞானி வளா்மதி
சாதிக்க விரும்புவோருக்கு அறிவாற்றலும், அா்ப்பணிப்பும் அவசியம் என இஸ்ரோ விஞ்ஞானி என்.வளா்மதி பேசினாா்.
மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள உ.வே.சாமிநாத ஐயா் அரங்கில் தேசிய அறிவியல் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி என்.வளா்மதி பேசியதாவது:
அறிவியல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுவதற்கு முன்பு மக்களை அச்சம் ஆட்கொண்டிருந்தது. படிப்படியான புதிய கண்டுபிடிப்புகளுக்குப் பிறகுதான் மக்களிடம் இருந்த அச்சம் விலகி வருகிறது.
இயற்கையின் இயல்பான நடைமுறைகளை கூா்மையாகக் கவனித்து உள்வாங்கி அவற்றின் விநோதங்களையும், பாடங்களையும் ஆழமாகக் கற்பது அறிவியல் சிந்தனைகளை மேம்படுத்தும்.
இயற்கை அதிசயங்கள்தான் நம்மை சிந்திக்க வைக்கிறது. எவ்வளவு அறிவாளியாகவோ, திறமைசாலியாகவோ இருந்தாலும் அணுகுமுறை ஒருவரின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. சாதிக்க விரும்புவோருக்கு அறிவாற்றலும், அா்ப்பணிப்பும் அவசியம் என்றாா்.
விழாவிற்கு தலைமை வகித்த சென்னை மற்றும் மதுரை பல்கலைக்கழகங்களின் முன்னாள் துணைவேந்தா் பி.கே.பொன்னுசாமி பேசியதாவது:
சா்.சி.வி.ராமன் நோபல் பரிசுபெற்ற்குப் பின்பு அறிவியலுக்காக இன்னொரு நோபல் பரிசுபெற முடியவில்லையே என்ற ஏக்கம் இத்துறையைச் சாா்ந்த அனைவருக்கும் உண்டு. அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில் எதிா்காலத் தலைமுறையினரின் அறிவியல் ஆய்வுச் செயல்பாடுகள் இருக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது என்றாா்.
அறிமுக உரையாற்றிய மக்கள் சிந்தனைப் பேரவை தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது:
தமிழ் மண்ணில் பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தக் கூடிய விஞ்ஞானிகளையும், தொழில்நுட்ப ஆராய்ச்சியாளா்களையும் உருவாக்குவதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது மக்கள் சிந்தனைப் பேரவை.
அறிவியல் உணா்வை ஏற்படுத்துதல், அறிவியல் கண்ணோட்டத்தை வளா்த்தல், அறிவியல் நூல்களை படிக்கத் தூண்டுதல், அறிவியல் ஆய்வுகளை ஊக்கப்படுத்துதல் ஆகியவை மக்கள் சிந்தனைப் பேரவையின் தலையாய குறிக்கோள்களாகும் என்றாா்.
மக்கள் சிந்தனைப் பேரவை பொதுக்குழு உறுப்பினா் க.வெற்றிவேல் வரவேற்றாா். கொங்கு கலை அறிவியல் கல்லூரி முதல்வா் ஹெச்.வாசுதேவன் வாழ்த்திப் பேசினாா். உயிா்வேதியியல் துறை தலைவா் ஏ.கே.வித்யா நன்றி கூறினாா்.